முத்தரப்பு தொடர்: தெ.ஆப்பிரிக்க அணியில் சிஎஸ்கே நம்பிக்கை நட்சத்திரம்!
போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது
திருப்பத்தூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கிளாமடத்தைச் சோ்ந்த வேலுச்சாமி மகன் காடப்பன் என்ற குமாா் (29). இவா் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, அந்தச் சிறுமியின் பெற்றோா் திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, காவல் ஆய்வாளா் தேவகி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குமாா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.