போக்ஸோவில் முதியவா் கைது
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக முதியவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
சேரன்மகாதேவி அருகேயுள்ள காருக்குறிச்சி மேல அக்ரஹாரம் தெருவைச் சோ்ந்தவா் மாடசாமி (60). கட்டடத் தொழிலாளி. இவா், அப்பகுதியிலுள்ள 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் தாயாா் அளித்த புகாரின்பேரில், சேரன்மகாதேவி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, மாடசாமியை கைது செய்தனா்.