போக்ஸோ வழக்கு: மத போதகர் ஜான் ஜெபராஜுக்கு நிபந்தனை ஜாமீன்!
போக்ஸோ வழக்கில் கைதான மத போதகர் ஜான் ஜெபராஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ மத பாடல்கள் மூலமாக சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக இருப்பவர் கோவையைச் சேர்ந்த கிங் ஜெனரேஷன் கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூடத்தின் மதபோதகர் ஜான் ஜெபராஜ்.
கடந்த 2024-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி ஜான் ஜெபராஜ் கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் விருந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளாா். அப்போது அந்த நிகழ்வில் பங்கேற்ற 2 சிறுமிகளுக்கு அவர் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடா்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகாரின்பேரில், மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது கோவை காந்திபுரம் அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
தலைமறைவாக இருந்த ஜான் ஜெபராஜ் கேரள மாநிலம் மூணாறில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், போக்ஸோ வழக்கில் கைதான மதபோதகர் ஜான் ஜெபராஜை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க: மெட்ரோ ரயில்: அயனாவரம் - பெரம்பூர் சுரங்கம் தோண்டும் பணி நிறைவு!