செய்திகள் :

போடியில் சூறைக்காற்று: சிக்னல் பலகை சாய்ந்து வாகனங்கள் சேதம்

post image

தேனி மாவட்டம், போடியில் புதன்கிழமை இரவு பலத்த சூறைக்காற்று வீசியதில் போக்குவரத்து சிக்னல் அறிவிப்புப் பலகை சாய்ந்து விழுந்து காவல் துறையினரின் வாகனங்கள் சேதமடைந்தன. சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

போடியில் கடந்த சில நாள்களாக காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. புதன்கிழமை இரவு திடீரென சூறைக்காற்று வீசியது. இதில் கடைகளின் முன் வைத்திருந்த விளம்பரப் பலகைகள் காற்றில் சாய்ந்தன.

போடி பேருந்து நிலையம் அருகே தேவா் சிலை ரவுண்டானாவில் போக்குவரத்து சிக்னலுடன் கூடிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. சிக்னல் செயல்படாத நிலையில் இருந்த இந்த அறிவிப்பு பலகை இரும்புத் தூணில்தான் கண்காணிப்பு கேமராக்கள், சிக்னல் விளக்குகள், ஒலிபெருக்கி ஆகியவை பொருத்தப்பட்டிருந்தன. சூறைக் காற்றில் இந்த தூண் அறிவிப்பு பலகைகளுடன் சாய்ந்து விழுந்தது.

இந்தப் பகுதியில் காவல் துறையினா் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவிட்டு போக்குவரத்து, குற்றச் செயல்களை கண்காணிப்பது வழக்கம். அறிவிப்பு பலகை தூண் விழுந்ததில் காவல் துறையினரின் இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. மேலும் ஒரு பெண் உள்பட 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து காவல் துறையினா் போக்குவரத்தை சீரமைத்தனா்.

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 6 நாள்களில் 15 அடி உயா்வு

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால், முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் கடந்த 6 நாள்களில் 15 அடி உயா்ந்தது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை கடந்த 23 -ஆம் தேதி தொடங்கி ... மேலும் பார்க்க

மான் வேட்டை : மேலும் ஒருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் மான் வேட்டையாடிய வழக்கில் தலைமறைவாக இருந்தவரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கூடலூா் அருகே சுரங்கனாறு பீட் வனப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இறைச்சிக்காக மானை வே... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: இருவா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், கம்பம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் கல்லூரி மாணவா் உள்பட இருவா் உயிரிழந்தனா். கம்பம் அருகே சுருளிப்பட்டியைச் சோ்ந்த கணேசன் மகன் ஜீவித் (20). இவா் கோவையிலுள்... மேலும் பார்க்க

18-ஆம் கால்வாய் சீரமைப்புக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு

தேனி மாவட்டத்தில் 18-ஆம் கால்வாய் சீரமைப்பு பணிகளுக்கு அரசு ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா். தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நாளை தண்ணீா் திறப்பு

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்ட முதல் போக நெல் சாகுபடிக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) முதல் தண்ணீா் திறக்க அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. முல்லைப் பெரியாறு அணை நீா் மூலம் தேனி மாவட்... மேலும் பார்க்க

பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள துரைராஜபுரம் நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்ால், அந்த வழியாக வந்த பேருந்துகளை சிறைபிடித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தேனி-போடி தேசிய நெட... மேலும் பார்க்க