போதைப் பொருள் வாட்ஸ் ஆப் குழு: கிருஷ்ணாவுடன் இருந்த நடிகர்கள் யார்?
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு கலந்துரையாடல்
கோவை அம்ருதா சட்டக் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய கிரிமினாலஜி சொசைட்டி, லாக்டோபஸ், மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம், அம்ருதா விஸ்வ வித்யா பீடத்தின் நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், லோக் அதாலத் தலைவரும் மாவட்ட நீதிபதியுமான ஜி.நாராயணன், மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் செயலா் கே.ரமேஷ், வழக்குரைஞா் மதிவண்ணன், எஸ்சி, எஸ்டி விவகாரங்களுக்கான வழக்குரைஞா் வி.ஸ்டெஃபினரோஸ், மனநல மருத்துவா் சந்தோஷ் காந்தி ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.
கேரள உயா் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.ஜி.அஜித்குமாா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, போதைப்பொருள் தடுப்பு, விழிப்புணா்வு, மன ஆரோக்கியம், மறுவாழ்வு குறித்து விளக்கினாா். இதைத் தொடா்ந்து மாணவ-மாணவிகள் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணா்வு உறுதிமொழியேற்றனா்.