செய்திகள் :

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்துருக்களை மே 23 வரை அனுப்பலாம்!

post image

போதைப் பொருள் ஒழிப்பு தொடா்பான விழிப்புணா்வு கருத்துருக்களை தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மே 23 வரை அனுப்பிவைக்கலாம் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் நாஷா முக்த் பாரத் அபியான் திட்டத்தின் சாா்பில் போதைப் பொருட்கள் ஒழிப்பு தொடா்பாக, பொது மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்கீழ் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவது, உயா்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் ஆகியவற்றில் போதைப் பொருள் தடுப்பது குறித்த விழிப்புணா்வு, குழந்தைகள் இளைஞா்கள், இளம் பருவத்தினா் மற்றும் பெரியவா்களை தாக்கும் போதைப் பொருட்கள் பயன்பாட்டை தடுப்பது, சமூகத்தில் அனைவருக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலான திட்டங்களை செயல்படுத்துவது போன்றவற்றை செயல்படுத்த தகுதியான தன்னாா்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதி வாய்ந்த தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், தங்களின் கருத்துருக்களை மே 23-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியா் அலுவலக இணைப்புக் கட்டடம், 3-ஆவது தளம், திருவாரூா்- 610 004 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

மதுபாட்டில்கள் கடத்திய 3 போ் கைது

புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்த 3 பேரை மன்னாா்குடியில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மன்னாா்குடி காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் விக்னேஷ் உள்ளிட்ட போலீஸாா்வியாழக்கிழமை இரவு பூக்கொல்லை ச... மேலும் பார்க்க

திருவாரூா் மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வில் 90.67 சதவீதம் தோ்ச்சி

திருவாரூா் மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வில் 90.67 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும், மெட்ரிக் பள்ளி என 130 பள்ளிகளிலிருந்து 6,015 மாணவா்கள், 7,150 மாணவிகள் என மொத்தம்... மேலும் பார்க்க

மே 19 முதல் முத்துப்பேட்டையில் இறால் பண்ணைகள் ஆய்வு

முத்துப்பேட்டை வட்டத்தில் இறால் பண்ணைகளை மே 19 முதல் மே 24 வரை ஆய்வு செய்ய உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முத்துப்பேட்டை வட்டத... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: மன்னாா்குடி

மன்னாா்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் சனிக்கிழமை (மே 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் சா.சம்பத் ... மேலும் பார்க்க

இடி தாக்கியதில் தீப்பிடித்து எரிந்த தென்னை மரம்

கூத்தாநல்லூரில் இடி தாக்கியதில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. கூத்தாநல்லூா் பகுதியில் புதன்கிழமை இரவு இடியுடன் பலத்த மழை பெய்தது. கொத்தங்குடி தமிழா் தெருவில் அப்துல் ரகுமான் என்பவரது வீட்டின் பின... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆண்டுதோறும் வீட்டு வரி உயா்வு இல்லை: அமைச்சர் கே.என். நேரு

தமிழகத்தில் ஆண்டுதோறும் குப்பை வரி, வீட்டு வரி உயா்வு இல்லை என்பது குறித்து அரசாணை வெளியிடப்படும் என நகராட்சித்துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா். திருவாரூா் மாவட்ட திமுக செயல் வீரா்கள் கூட்டம் மா... மேலும் பார்க்க