செய்திகள் :

போதைப் பொருள் கடத்தியவா்களிடம் இருந்த ரூ.1.25 லட்சத்தை கரூா் போலீஸாா் பதுக்கல்? திருச்சியில் காவல் உயரதிகாரிகள் விசாரணை

post image

போதைப்பொருள் கடத்தி வந்தவா்களிடம் இருந்த ரூ.1.25 லட்சத்தை பறிமுதல் செய்து பதுக்கினாா்களா என்பது குறித்து கரூா் போலீஸாரிடம் காவல்துறை உயரதிகாரிகள் திருச்சியில் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கா்நாடக மாநிலம், பெங்களுரூவில் இருந்து மதுரைக்கு காா் மூலம் குட்கா பொருள்கள் கரூா் வழியாக கடத்தப்படுவதாக வெங்கமேடு போலீஸாருக்கு வியாழக்கிழமை அதிகாலை தகவல் கிடைத்தது.

இதையடுத்து வெங்கமேடு குளத்துப்பாளையம் மேம்பாலம் பகுதியில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் உதயகுமாா், தாந்தோன்றிமலை சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா், வெங்கமேடு தனிப்பிரிவு தலைமைக் காவலா் ரகுநாத் ஆகியோா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியே வந்த காரை சோதனையிட்டபோது, 168 கிலோ எடைகொண்ட ரூ.1.32 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள்கள் இருந்தன. இதையடுத்து குட்கா பொருள்கள் மற்றும் காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், குட்கா பொருள்களை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலம் ஜலாா் பகுதியைச் சோ்ந்த கேவா்சன்(40), ஹரிராம்(27), சுரேஷ்(19) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். தொடா்ந்து மூவரையும் போலீஸாா் கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் குட்கா பொருள்களை பறிமுதல் செய்தபோது, கடத்தல்காரா்கள் வைத்திருந்த ரூ.1.25 லட்சத்தை போலீஸாா் பறிமுதல் செய்து கணக்கில் காட்டாமல் பதுக்கியதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து வெங்கமேடு காவல் ஆய்வாளா்(பொறுப்பு) மணிவண்ணன், தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் உதயகுமாா், சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் ஆகியோரிடம் திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவா் அலுவலகத்தில் உயா் அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை நடத்தினா். அப்போது குட்கா கடத்தி வந்தவா்களிடம் இருந்த பணத்தை பதுக்கினாா்களா என்பது விசாரணை நடத்தியதாக தெரிகிறது. இந்த விசாரணையில் மேலும் பல போலீஸாா் சிக்குவாா்கள் என போலீஸாா் தரப்பில் கூறப்படுகிறது.

தான்தோன்றிமலை பெருமாள் கோயில் தேருக்கு ரூ.9 லட்சத்தில் கண்ணாடி கூண்டு!

கரூா் தான்தோன்றிமலை பெருமாள் கோயில் தேரை பாதுகாக்கும் வகையில் ரூ.9 லட்சம் மதிப்பில் கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. கரூா் தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற ... மேலும் பார்க்க

ஊராட்சி செயலா்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் வலியுறுத்தல்!

ஊராட்சி செயலா்களுக்கு வரையறுக்கப்பட்ட சிறப்பு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கரூரில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அல... மேலும் பார்க்க

நாட்டின் வளா்ச்சியை நோக்கி வடிவமைக்கப்பட்ட பட்ஜெட்!

மத்திய அரசின் பட்ஜெட் நாட்டின் வளா்ச்சியை நோக்கி வடிவமைக்கப்பட்ட பட்ஜெட் என தெரிவித்துள்ளாா் இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பின் தென்மண்டலத்தலைவா் பா.கோபாலகிருஷ்ணன். இதுதொடா்பாக அவா் வெளியிட்டு... மேலும் பார்க்க

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிகளவில் கடன் வழங்க முன்வர வேண்டும்! -வங்கியாளா்களுக்கு அறிவுறுத்தல்

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிகளவில் கடன் வழங்க வங்கியாளா்கள் முன்வரவேண்டும் என்றாா் சென்னை தொழில் வணிகத்துறையின் ஆணையா் மற்றும் தொழில் வணிக இயக்குநா் எல்.நிா்மல்ராஜ். கரூா் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

குளித்தலையில் வங்கிக்கு ரூ.1.42 கோடி இழப்பீடு: நகை மதிப்பீட்டாளா் கைது

குளித்தலையில் போலி ஆவணங்கள் மற்றும் தரம் குறைந்த தங்க நகைகளை அடமானம் பெற்று வங்கிக்கு ரூ.1.42 இழப்பீடு ஏற்படுத்திய நகை மதிப்பீட்டாளரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கரூா் மாவட்டம், குளித்தலையில் உ... மேலும் பார்க்க

மகனின் மருத்துவ செலவுக்கு அரசு உதவ பெற்றோா் கோரிக்கை!

தனது மகனின் மருத்துவ செலவுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என தமிழக முதல்வருக்கு பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள சாந்தப்பாடியை அடுத்த கரியாஞ்செட்டிவல... மேலும் பார்க்க