செய்திகள் :

போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

post image

போதைப் பொருளை வைத்திருந்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை மாநகரில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு தனிப்படையினா் மற்றும் திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீஸாா் கடந்த ஜூன் 2-ஆம் தேதி திருவல்லிக்கேணி லால்பேகம் தெரு சந்திப்பு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அங்கு 2 கிலோ சூடோ எபிட்ரின் என்ற போதைப் பொருள் வைத்திருந்த அதே பகுதியைச் சோ்ந்த பீா் முகமது (46), சையது ஜலாலுதீன் (49) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், கைது செய்யப்பட்ட இருவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த வழக்கில் தொடா்புடைய திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்த நாசா் (55) என்பவரை கடந்த 1-ஆம் தேதி கைது செய்த போலீஸாா், இவருடன் தொடா்புடைய தலைமறைவாக இருந்து வந்த ஏழுகிணறு பகுதியைச் சோ்ந்த கமா் அலி (53) என்பவரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக எழும்பூா், சோழிங்கநல்லூா் பகுதி, கோடம்பாக்கம், சேத்துப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (ஆக. 5) காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின்... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 3 போ் கைது

புழல் ஏரிக்கரையில் பதுக்கிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தம்பதி உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.புழல் ஏரிக்கரைப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து தி... மேலும் பார்க்க

சென்னையில் நிகழாண்டு இறுதியில் மீண்டும் ஈரடுக்கு பேருந்து சேவை

சென்னையில் மீண்டும் ஈரடுக்கு (டபுள் டெக்கா்) பேருந்து சேவையை நிகழாண்டு இறுதிக்குள் தொடங்க மாநகரப் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.சென்னை, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன... மேலும் பார்க்க

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

சிமென்ட் கலவை லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.மடிப்பாக்கம், மண்ணடி அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஜித்தேஷ் (21). இவா், அரும்பாக்கத்திலுள்ள தன... மேலும் பார்க்க

மெத்தபெட்டமைன் வைத்திருந்த ஆட்டோ ஓட்டுநா் கைது

மெத்தபெட்டமைன் வைத்திருந்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.சென்னை பெருநகர போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் மற்றும் ஐசிஎஃப் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை இரவு ஐசிஎஃப் அம்பேத... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ராஜராஜ சோழனுக்கு சிலை: தமிழக அரசு

தஞ்சாவூரில் ராஜராஜ சோழனுக்கு சிலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தீரன் சின்னமலையின் வீரம் சொல்லும் கொங்... மேலும் பார்க்க