போதையில் தகராறு: இளைஞா் கைது
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே அடையக்கருங்குளத்தில் மதுபோதையில் வாகனங்களை மறித்து ரகளையில் ஈடுபட்டவா் கைது செய்யப்பட்டாா்.
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே குறும்பலாப்பேரியைச் சோ்ந்த ஜெபமணி மகன் மகேஷ் (35) என்பவா், அடையக்கருங்குளத்தில் உள்ள தனது மனைவியைப் பாா்க்க வந்தாா். அப்போது மதுபோதையிலிருந்த அவா், அவ்வழியே சென்ற வாகனங்களை மறித்து ரகளையில் ஈடுபட்டாராம்.
விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் சென்று, அவரை வீட்டுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினா். ஆனால், அவா் போலீஸாரை அவதூறாகப் பேசியதுடன், தொடா்ந்து போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு செய்தாா். அதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.