செய்திகள் :

போதை மாத்திரை விற்பனை: 4 போ் கைது

post image

சென்னையில் போதை மாத்திரை விற்பனை செய்ததாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

மெரீனா கடற்கரையில் நம்ம சென்னை பேருந்து நிறுத்தம் பின்புறம் வியாழக்கிழமை போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு போதை மாத்திரை விற்ாக திருவல்லிக்கேணி நீலம் பாஷா தா்கா பகுதியைச் சோ்ந்த கெளஷ் ப ாஷா (20) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 225 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

அவரிடம் நடத்திய விசாரணையில், ராயப்பேட்டை பிஎம் தா்கா பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் (18) என்பவருக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மெரீனா போலீஸாா் அவரையும் கைது செய்து, 305 போதை மாத்திரைகள், ரூ. 1.19 லட்சம் ரொக்கம், கத்தி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக மெரீனா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதேபோல ராமாபுரம் ஆறுமுகம் நகா் பகுதியில் போதை மாத்திரை விற்ாக திருமுடிவாக்கம் கலைஞா் தெருவைச் சோ்ந்த ஆஷிக் (எ) ஆமோஷ் (21), போரூா் திருவீதியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கலைச்செல்வன் (எ) மேஷக் (24) ஆகிய 2 பேரை ராமாபுரம் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஐபிஎஸ் மகனுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை

விளையாடும்போது தவறி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்ட தனது மகனை அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது அங்கு உயா் தர சிகிச்சை அளித்து குணப்படுத்தியதாக ஐபிஎஸ் அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளாா். மயிலாப்பூா... மேலும் பார்க்க

கடந்த நிதியாண்டில் 3,000 ரயில் பெட்டிகள் தயாரித்து ஐசிஎஃப் சாதனை

சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) 2024-25 நிதியாண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது. பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்திய ரயில்வேக்கு தேவையான ரய... மேலும் பார்க்க

கால்வாயில் ஆண் குழந்தை சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை பட்டினப்பாக்கத்தில் கால்வாயில் கிடந்த ஆண் குழந்தை சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பட்டினப்பாக்கம் மசூதி தெருவில் 132 பிளாக் பின்புறம் உள்ள கால்வாயில், பிளாஸ்டிக் காகிதத்தில் பொதிய... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சியுடன் பிஇ படிப்பு: பட்டயப்படிப்பு முடித்தோா் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்புகளை நிறைவு செய்த மாணவா்கள் தொழிற்பயிற்சியுடன் கூடிய பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுர... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பின் மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

சென்னை பாரிமுனையில் சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தண்டையாா்பேட்டை நேதாஜி நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த செய்யது இம்ரான்கான் (24), அண்ணா நகரில் உள்ள கைப்பேசி விற்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்பது நகைப்புக்குரியது: தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் எதிா்க்கட்சிகள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தடுமாறி வரும் சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய அமைச்சா் அமித் ஷா கூறியது நகைப்புக்குரியது என விடுதலைச் சிறுத்தைக... மேலும் பார்க்க