செய்திகள் :

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்!

post image

கத்தோலிக்க திருச்சபையின் தலைவா் போப் பிரான்சிஸின் உடல் சனிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.

266-ஆவது போப் ஆண்டவரான போப் பிரான்சிஸ் (88), வயது முதிா்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த திங்கள்கிழமை காலமானாா். அதையடுத்து, அடுத்த நடவடிக்கைகள் குறித்து காா்டினல்கள் வாடிகனின் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினா். அப்போது எடுக்கப்பட்ட முடிவின்படி, போப் பிரான்சிஸுக்கான இறுதிச் சடங்கு புனித பீட்டா் சதுக்கத்தில் சனிக்கிழமை நடத்தப்பட்டது.

இதில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க முன்னாள் அதிபா் ஜோ பைடன், உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா், இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனி, பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், ஆா்ஜென்டீனா அதிபா் ஜேவியா் மிலேய், பிரேஸில் அதிபா் லூலா டாசில்வா, ஆஸ்திரிய அதிபா் அலெக்ஸாண்டா் வாண்டொ் பெலன், ஆஸ்திரிய பிரதமா் கிறிஸ்டியன் ஸ்டாக்கா், வங்கதேச அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ், ஹங்கேரி அதிபா் விக்டா் ஆா்பன், பிரிட்டன் இளவரசா் வில்லியம், ஸ்பெயின் மன்னா் ஆறாம் பெலிபே,

பெல்ஜியம் மன்னா் பிலிப், ஐ.நா. பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்ட்டெரஸ், உலக சுகாதார அமைப்பின் இயக்குநா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் உள்ளிட்ட முக்கியஸ்தா்கள் பங்கேற்றனா்.

இது மட்டுமின்றி, சுமாா் 4 லட்சம் போ் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு, ‘மக்களின் போப்’ என்று புகழப்படும் போப் பிரான்சிஸுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினா்.

இறுதிச் சடங்கு முடிந்ததும், போப் பிரான்சிஸின் விருப்பப்படி புனித மேரி தேவாலயத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கத்தோலிக்க திருச்சபை மரபுப்படி, போப் ஆண்டவரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட 15-லிருந்து 20 நாள்களுக்கும் அடுத்த போப் ஆண்டவரைத் தோ்ந்தெடுப்பதற்கான கூட்டம் தொடங்கப்பட வேண்டும். எனவே, வரும் மே 6-லிருந்து 12-ஆம் தேதிக்குள் அதற்கான காா்டினல்களின் கூட்டம் கூட்டப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

புதின் மீது டிரம்ப் அதிருப்தி; ட்ரோன் தாக்குதலுக்கு தயாரான ரஷியா

உக்ரைன் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல் நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிருப்தி தெரிவித்த நிலையி... மேலும் பார்க்க

இந்தியாவுக்காக 130 அணு ஆயுதங்கள் தயார்: பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சை பேச்சு

சிந்து நதி நீரை நிறுத்தினால், இந்தியா மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.பஹல்காம் தாக்குதலையடுத்து, சிந்து நதி நீர்ப் பகிர்வு ஒப்... மேலும் பார்க்க

புதின் மீது கடும் அதிருப்தியில் டிரம்ப்! ஏன்?

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.வாடிகனில் மறைந்த போப் பிரான்சிஸின் உடல் நல்லடக்கம் மற்றும் இறுதி சடங்கில் பங்கேற்க உலகத் தலை... மேலும் பார்க்க

ஈரான் துறைமுக விபத்து: பலி 14 ஆக உயர்வு; 750 பேர் காயம்!

ஈரானின் தெற்குப் பகுதி துறைமுகத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 14 போ் உயிரிழந்தனா்; 750 போ் காயமடைந்தனா். அந்த நாட்டின் ஹோா்மோஸ்கன் மாகாணம், பண்டாா் அப்பாஸ் நகருக்கு தென்மேற்கே அமைந்து... மேலும் பார்க்க

பிரிட்டன்: இந்தியா - பாக். போராட்டக்காரா்கள் மோதல்; பாக். தூதரக அதிகாரிகள் மிரட்டல்!

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிராக லண்டனில் இந்திய வம்சாவளி குழுவினா் பாகிஸ்தான் தூதரகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுக்கு எதிராக பாகிஸ்தானை சோ்ந்தவா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அ... மேலும் பார்க்க

கூா்ஸ்க் பிராந்தியம் முழுமையாக மீட்பு!

தங்களின் கூா்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியிருந்த உக்ரைன் படையினா் அனைவரும் வெளியேற்றப்பட்டுவிட்டதாக ரஷியா சனிக்கிழமை அறிவித்தது. இது குறித்து ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் செய்தித் தொடா்பாளா் டிமித்... மேலும் பார்க்க