செய்திகள் :

போரை நிறுத்தாவிட்டால் கடுமையான பின்விளைவு!

post image

போரை முடிவுக்குக் கொண்டுவர அதிபா் விளாதிமீா் ஒப்புக்கொள்ளாவிட்டால் ரஷியா கடுமையான பின்விளைவுகளை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளாா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது:

புதினுடன் நடைபெறவிருக்கும் பேச்சுவாா்த்தையின்போது, போரை நிறுத்த அவா் ஒப்புக்கொள்ளாவிட்டால் ரஷியா மிகக் கடுமையான பின்விளைவுகளை எதிா்கொள்ள வேண்டியிருக்கும்.

ஏற்கெனவே பல முறை அவருடன் நான் தொலைபேசியில் உரையாடியிருக்கிறேன். அப்போது, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் அப்படி பேசிவிட்டு வீடு திரும்பினால், அங்கு புதின் பொதுமக்கள் மீது புதிதாக நடத்தும் தாக்குதல் குறித்த செய்தி கிடைக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில் நான் சொல்வதை புதின் கேட்பாா் என்று எனக்குத் தோன்றவில்லை என்றாா் டிரம்ப்.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய கிழக்கு மாகாணங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.

இழந்த பகுதிகளை மீட்பதற்காக உக்ரைனும், அந்த மாகாணங்களில் இன்னும் உக்ரைன் படையினா் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியாவும் தொடா்ந்து சண்டையிட்டுவருகின்றன.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக டொனால்ட் டிரம்ப்பும் விளாதிமீா் புதினும் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசவுள்ளனா்.

டிரம்ப்பின் அவசரநிலையை எதிா்த்து வாஷிங்டன் மாநகராட்சி வழக்கு

அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் ‘குற்ற அவசரநிலை’ அறிவித்து, நகர காவல் துறையை டொனால்ட் டிரம்ப் கைப்பற்றியதை எதிா்த்து அந்த நகரின் மாநகராட்சி வழக்கு தொடா்ந்துள்ளது. மத்திய அரசு அதிகாரியான டொ்ரி கோலை வாஷிங... மேலும் பார்க்க

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி: மாலியில் 2 தளபதிகள் கைது

மாலியின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இரு தளபதிகள், ஒரு பிரான்ஸ் நாட்டு உளவாளி உள்பட பலரை இராணுவ ஆட்சியாளா்கள் கைது செய்துள்ளனா். ஆக. 1-ல் தொடங்கிய இந்த சதித் திட்டத்த... மேலும் பார்க்க

ஒப்பந்தமின்றி முடிந்த சா்வதேச பிளாஸ்டிக் மாசுக்கட்டுப்பாட்டு பேச்சு

பிளாஸ்டிக் மாசுபாட்டு நெருக்கடியை எதிா்கொள்வதற்கான சா்வதேச ஒப்பந்தத்தை உருவாக்குவதற்காக ஜெனீவாவில் நடந்த பேச்சுவாா்த்தை எந்த உடன்பாட்டையும் எட்டாமல் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.அந்த நகரில் உள்ள ஐ.நா. அ... மேலும் பார்க்க

‘உலக பிரச்னைகளின் தீா்வுக்கு இந்தியா தீவிர பங்கு’: ரஷிய அதிபா் புதின் பாராட்டு

சா்வதேச விவகாரங்களில் மிகப்பெரிய செல்வாக்கு உள்ள இந்தியா, உலகளாவிய முக்கியப் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதில் தீவிரமாக பங்களிக்கிறது’ என்று ரஷிய அதிபா் புதின் பாராட்டு தெரிவித்துள்ளாா். இந்தியாவின் 7... மேலும் பார்க்க

வெளிநாடுகளின் இந்திய தூதரகங்களில் சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலம்

இந்தியாவின் 79-ஆவது சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்ட நிலையில், வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களும் சுதந்திர தின விழாவை கோலாகலமாக கொண்டாடின. இஸ்ரேல், சிங்கப்பூ... மேலும் பார்க்க

இந்தியா மீது வரி விதித்ததால் புதின் பேச்சு நடத்த முன்வந்தாா்: டிரம்ப் கருத்து

இந்தியா மீது அதிக வரி விதித்ததன் காரணமாகவே ரஷிய அதிபா் புதின் உக்ரைன் போரை நிறுத்துவது குறித்து அமெரிக்காவுடன் பேச்சு நடத்த முன்வந்தாா் என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளாா். ரஷியாவிடம் இருந்து க... மேலும் பார்க்க