செய்திகள் :

போர் நிறுத்தத்தில் அமெரிக்கா எந்தப் பங்கும் வகிக்கவில்லை! - டிரம்ப்பிடம் மோடி பேச்சு

post image

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தில் அமெரிக்கா எந்தப் பங்கும் வகிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசியதாக மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்திருக்கிறார்.

இஸ்ரேல்-ஈரான் மோதல் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் செவ்வாய்க்கிழமை அமெரிக்காவிற்கு அவசர அவசரமாக புறப்பட்டுச் சென்றார். இதனால், ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் டிரம்ப்பின் சந்திப்பு நடைபெறவில்லை.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி 35 நிமிட தொலைபேசி உரையாடலை நடத்தியதாகவும், அந்த உரையாடலில் இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்ந்து நடைபெற்று வருவதாக மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

இந்த உரையாடல் குறித்து வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “அதிபர் டிரம்ப்பும் பிரதமர் மோடியும் இன்று சுமார் 35 நிமிடங்கள் பேசினர். உரையாடலின் போது, ​​பாகிஸ்தானின் தாக்குதலுக்கு, இந்தியா ஏவுகணைகள் மூலம் பதிலடி கொடுக்கும் என்றும், ஆபரேஷன் சிந்தூர் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது வர்த்தக ரீதியான எந்த மத்தியஸ்தமும் நடைபெறவில்லை. பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதாலே மோதல் கைவிடப்பட்டது. இந்தப் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறியதாகத்” தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த மே 7 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ஆயுதப் படைகள் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பயங்கரவாதிகள், ராணுவ அதிகாரிகள் உள்பட 140-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். வெள்ளை மாளிகையில் இன்று(ஜூன் 17) பாகிஸ்தானின் ராணுவத் தளபதி அசிம் முனீரைச் சந்திப்பதற்கு முன்னர் இந்த உரையாடல் நிகழ்ந்துள்ளது.

இந்த உரையாடலின் போது, ​​கனடாவிலிருந்து திரும்பியவுடன் பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு வர முடியுமா? என்று அதிபர் டிரம்ப் கேட்டதாகவும், பிரதமர் மோடி அந்த அழைப்பை நிராகரித்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதைத் தொடர்ந்து வரவிருக்கும் குவாட் உச்சி மாநாட்டிற்காக இந்தியாவுக்கு வருமாறு டிரம்பை பிரதமர் மோடி அழைத்தார். பங்கேற்பதை அவர் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், டிரம்ப் அழைப்பை ஏற்றுக்கொண்டார் என்றே கூறப்படுகிறது.

இதையும் படிக்க: மீண்டும்.. மீண்டுமா..? சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் ஒத்திவைப்பு!

ஒரே நாளில் ஏர் இந்தியாவின் 3 சர்வதேச விமானங்கள் ரத்து!

ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான 3 சர்வதேச விமானங்களின் பயணங்கள் பல்வேறு காரணங்களினால் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன.ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான 3 விமானங்களின் சர்வதேச பயணங்கள், தொழில்ந... மேலும் பார்க்க

ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஹைதரபாத்திலுள்ள பேகம்பேட் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அது போலியானது என உறுதியாகியுள்ளது. பேகம்பேட் விமான நிலையத்தின் வளாகத்தினுள் வெ... மேலும் பார்க்க

கரோனா பரவல்: மகாராஷ்டிரத்தில் 61 புதிய பாதிப்புகள் உறுதி!

மகாராஷ்டிர மாநிலத்தில் புதியதாக 61 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தற்போது கரோனா தொற்றானது மீண்டும் பரவி ... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் நக்சல் முகாம் தகர்ப்பு! வெடிகுண்டுகள் பறிமுதல்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்திருந்த நக்சல்களின் முகாம் தகர்க்கப்பட்டு 14 நவீன வெடிகுண்டுகள் மற்றும் 50 கிலோ அளவிலான வெடிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்கு சிங்பம் மாவட்டத்தின் சிட்பில் கிர... மேலும் பார்க்க

ஹரியாணாவில் மாடல் அழகி கொலை! காரணம் என்ன?

ஹரியாணாவின் பானிபட் கால்வாயில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஹரியாணாவைச் சேர்ந்த மாடல் அழகியின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹரியாணாவின், பானிபட் பகுதியைச் சேர்ந்தவர் மாடல் அழக... மேலும் பார்க்க

தென்மேற்கு பருவமழை: ராஜஸ்தானில் முன்கூட்டியே தொடங்கியது!

ராஜஸ்தான் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் முன்னதாகவே தொடங்கியுள்ளதாக, அம்மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கனமழை... மேலும் பார்க்க