செய்திகள் :

போர் நிறுத்தம் எதிரொலி: 900 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை!

post image

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததன் விளைவாக இந்திய பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை காலை ஏற்றத்துடன் தொடங்கின.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், ஈரானின் மூன்று அணு ஆயுத தளவாடங்கள் மீது அமெரிக்கா அதிரடியாகத் தாக்குதல் நடத்தியதை அடுத்து, திங்கள்கிழமை இரவு கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளங்கள் மீது ஈரான் அதிரடியாக ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில், இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர்நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். இதனால், செவ்வாய்க்கிழமை காலை வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் ஏற்றத்துடன் தொடங்கின.

காலை 9.17 மணி நிலவரப்படி மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1.12 சதவிகிதம் (914 புள்ளிகள்) அதிகரித்து 82,810.81 புள்ளிகளாக உயர்ந்தது. அதேபோல், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 1.07 சதவிகிதம் (267 புள்ளிகள்) அதிகரித்து 25,239.05 புள்ளிகளில் வர்த்தகமானது.

அதானி போர்ட்ஸ், ஜியோ, ஸ்ரீராம் பைனான்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், அதானி எண்டர்பிரைசர்ஸ் உள்ளிட்ட முன்னணி பங்குகள் 5 சதவிகிதம் வரை லாபம் பெற்றுள்ளன. இரு நாடுகளுக்கிடையேயான போரின் காரணமாக அதிகரித்த கச்சா எண்ணெயின் விலை, மீண்டும் சரியத் தொடங்கியுள்ளது.

இதையும் படிக்க... இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்த எதிரொலி! கச்சா எண்ணெய் அதிரடி சரிவு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 75 காசுகள் உயர்ந்து ரூ.86.03 ஆக முடிவு!

மும்பை: மத்திய கிழக்கில் ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து, உலகளாவிய கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவிலிருந்து மீண்டு, டாலருக்கு நிகராக 75 காசுகள் உயர்ந்து ரூ.86.03 ... மேலும் பார்க்க

ஒன் பிளஸ்-க்கு போட்டியாக விவோவின் புதிய ஸ்மார்ட்போன்!

விவோ நிறுவனத்தின் எக்ஸ் 200 எஃப்இ ஸ்மார்ட்போன், ஜூலை மாத இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், தைவானில் அறிமுகமாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தியாவில் இந்த ஸ்மார்... மேலும் பார்க்க

மத்திய கிழக்கில் ஏற்பட்ட பதற்றங்களுக்கு மத்தியிலும் சென்செக்ஸ் 158 புள்ளிகள் உயர்வுடன் முடிவு!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்த மீறல் பற்றிய தகவல்கள் வெளியான நிலையில், முதலீட்டாளர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருந்ததால், முதலீட்டாளர்கள் சற்று லாபம் ஈட்யதின் வெளிப்பாட்டின் காரணமாக சென்செக்ஸ... மேலும் பார்க்க

ஒரு மாதத்திற்குள் இன்னொரு ஸ்மார்ட்போனா? ஜூலை 2-ல் அறிமுகம் செய்கிறது விவோ!

விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான, டி 4 லைட் 5ஜி ஜூலை 2ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளது.கடந்த 18ஆம் தேதி விவோ டி 4 அல்ட்ரா இந்தியாவில் அறிமுகமான நிலையில், தற்போது ஒரு மாதத்திற்குள் மற்றொ... மேலும் பார்க்க

பஜாஜ் சிஎன்ஜி பைக்கின் விலை ரூ.5,000 குறைப்பு

புணே: தனது ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் விலையை ரூ.5,000 குறைத்துள்ளதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.அதையடுத்து, அந்த பைக்கின் ஆரம்ப விலை தற்போது ரூ.85,976-ஆக (காட்சியக விலை) குறைந்துள்ளது. டிர... மேலும் பார்க்க

டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் 2.77% பங்குகளை கையகப்படுத்திய மோதிலால் ஓஸ்வால்!

புதுதில்லி: நொய்டாவை தளமாகக் கொண்ட டிக்சன் டெக்னாலஜிஸ் (இந்தியா) நிறுவனத்தின் உரிமையாளரான சுனில் வச்சானி தனது 2.77% பங்குகளை அதாவது 16.70 லட்சம் பங்குகளை ரூ.2,221 கோடிக்கு ஒப்பந்தத்தின் மூலம் கைமாறியத... மேலும் பார்க்க