செய்திகள் :

போர் நிறுத்தம்: பின்னணியில் யார்? பாகிஸ்தானுக்கு தொடர் அழுத்தம்!

post image

இந்தியாவுடன் போர் நிறுத்தம் செய்துகொள்ள சம்மதம் என்று அதிரடியாக அறிவித்துவிட்ட பாகிஸ்தான் ர்வதேச நாடுகளின் அழுத்தத்துக்குப் பணிந்ததா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைகளைச் சற்றும் எதிர்பார்த்திடாத பாகிஸ்தான் என்னவோ அதிர்ந்துபோனது மறுக்க முடியாத உண்மை.

‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயரில் இந்திய விமானப்படை பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாதிகளின் முகாம்களையும் வசிப்பிடங்களையும் அதிதுல்லியமாக தாக்கியதை பாகிஸ்தானால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இதற்கு கடும் எதிர்வினையாற்றிய அந்நாட்டு அரசு இந்தியாவுக்கு உரிய நேரத்தில் பதிலடி கொடுப்போம் என்று அன்றைய இரவே சூளுரைத்தது.

அதனைத்தொடர்ந்து, மறுநாளான புதன்கிழமையிலிருந்து(மே 8) இந்திய எல்லைக்குள் அத்துமீறி வான் வழி தாக்குதல்களை தொடர்ச்சியாக நடத்தியது. இன்று(மே 10) அதிகாலை வரையிலும் பாகிஸ்தானிலிருந்து டிரோன், ஏவுகணை தாக்குதல்கள் நீடித்தன.

ஆனால், இன்னொருபுறம் அமெரிக்கா தரப்பிலிருந்து பாகிச்தான் அரசுக்கு தொடர்ச்சியாக நெருக்கடி அளிக்கப்பட்டது. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ பாகிஸ்தான் பிரதமர், ராணுவ தளபதிகளுடன் பேச்சு நடத்தி இந்த சண்டை மிகப்பெரிய போராக விஸ்வரூபமெடுக்காமல் இருப்பதற்கு தீவிர முனைப்பு காட்டினார் மார்கோ ரூபியோ.

அதன் எதிரொலியாக, இன்று(மே 10) மாலை போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குநர்கள் தரப்பிலிருந்து இந்திய ராணுவ தலைமை இயக்குநரகத்தை தொடர்புகொண்டு பேசி உடனடி போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

அதனைத்தொடர்ந்து, மாலை 5 மணியிலிருந்து போர் நிறுத்தம் அமலானது. தரை வழி, வான் வழி, கடல் வழி என இரு நாட்டு முப்படைகளும் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொள்ள சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மார்கோ ரூபியோ பேசியிருப்பதாவது; “கடந்த 48 மணி நேரமாக அமெரிக்க துணை அதிபர் ஜெ. டி. வான்ஸும் நானும் இந்திய, பாகிஸ்தான் பிரதமர்களுடனும், அவ்விரு நாட்டு மூத்த அதிகாரிகளுடனும், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடனும், பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனீருடனும், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலுடனும் தொடர்ந்து பேச்சு நடத்தினோம்.

இந்தநிலையில், இந்திய, பாகிஸ்தான் அரசுகள் போரை உடனடியாக நிறுத்த சம்மதித்திருக்கின்றன. இரு நாடுகளுக்குமிடையிலான பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொதுவான இடத்தில் விரிவான ஆலோசனை மேற்கொள்ளவும் உடன்பட்டுள்ளன.

இத்தருணத்தில், அமைத்திக்கான பாதையை தேர்ந்தெடுக்க ஆர்வம் காட்டிய பிரதமர்கள் மோடி, ஷெரீப் ஆகியோரின் முழு பங்களிப்பை மேற்கோள் காட்ட விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

நைஜீரியாவில் பேருந்து விபத்து: 21 தடகள வீரர்கள் பலி

நைஜீரிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 21 தடகள வீரர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓகுன் மாநிலத்தின் தெற்கே சுமார் 1000 கிமீ தொலைவில் நடைபெற்ற 22வது தேசிய விளையாட்டு விழாவில... மேலும் பார்க்க

போர் நிறுத்த ஒப்பந்தம்! ஹமாஸின் கூற்றை மறுத்த அமெரிக்கா!

இஸ்ரேல் - காஸா போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தத்தில் ஹமாஸின் கூற்றை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை.இஸ்ரேல் - காஸா இடையிலான போரை நிறுத்துவதற்காக அமெரிக்கா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில்... மேலும் பார்க்க

அணு ஆயுத ஒப்பந்தம்! அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஈரான் பதில் என்ன?

அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை ஈரான் நாட்டுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது.ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாதென்றும், அந்நாட்டின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும் அமெரிக்க முன்ன... மேலும் பார்க்க

யார் இந்த உலக அழகி? இந்தாண்டு பட்டம் வென்றவர்!

உலக அழகிப் போட்டியில் ஓபல் சுச்சாட்டாவுக்கு கிரீடம் சூட்டப்பட்டது.தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாதில் 72-வது உலக அழகிப் போட்டி, மே 10 தேதி தொடங்கி சனிக்கிழமை (மே 31) ஆம் தேதிவரையில் நடைபெற்றது. இந்தியாவ... மேலும் பார்க்க

எஃகு, அலுமினியத்துக்கு இருமடங்கு வரி: டிரம்ப்பின் அறிவிப்பால் இந்திய ஏற்றுமதியாளா்களுக்குப் பாதிப்பு!

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியம் மீதான வரிகளை இரட்டிப்பாக்குவதாக அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு, இந்திய ஏற்றுமதியாளா்களை வெகுவாக பாதிக்கும் என்று... மேலும் பார்க்க

நைஜீரியா வெள்ளம்: உயிரிழப்பு 151-ஆக அதிகரிப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பருவமழை காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 151-ஆக அதிகரித்துள்ளது.நைஜா் மாகாணத்தைச் சோ்ந்த, வியாபாரிகள் ஒன்றுகூடும் முக்கிய சந்தையான மோக்வா நகரம் வெள்ள நீரில் மு... மேலும் பார்க்க