செய்திகள் :

போர் நிறுத்தம்: பின்னணியில் யார்? பாகிஸ்தானுக்கு தொடர் அழுத்தம்!

post image

இந்தியாவுடன் போர் நிறுத்தம் செய்துகொள்ள சம்மதம் என்று அதிரடியாக அறிவித்துவிட்ட பாகிஸ்தான் ர்வதேச நாடுகளின் அழுத்தத்துக்குப் பணிந்ததா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைகளைச் சற்றும் எதிர்பார்த்திடாத பாகிஸ்தான் என்னவோ அதிர்ந்துபோனது மறுக்க முடியாத உண்மை.

‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயரில் இந்திய விமானப்படை பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாதிகளின் முகாம்களையும் வசிப்பிடங்களையும் அதிதுல்லியமாக தாக்கியதை பாகிஸ்தானால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இதற்கு கடும் எதிர்வினையாற்றிய அந்நாட்டு அரசு இந்தியாவுக்கு உரிய நேரத்தில் பதிலடி கொடுப்போம் என்று அன்றைய இரவே சூளுரைத்தது.

அதனைத்தொடர்ந்து, மறுநாளான புதன்கிழமையிலிருந்து(மே 8) இந்திய எல்லைக்குள் அத்துமீறி வான் வழி தாக்குதல்களை தொடர்ச்சியாக நடத்தியது. இன்று(மே 10) அதிகாலை வரையிலும் பாகிஸ்தானிலிருந்து டிரோன், ஏவுகணை தாக்குதல்கள் நீடித்தன.

ஆனால், இன்னொருபுறம் அமெரிக்கா தரப்பிலிருந்து பாகிச்தான் அரசுக்கு தொடர்ச்சியாக நெருக்கடி அளிக்கப்பட்டது. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ பாகிஸ்தான் பிரதமர், ராணுவ தளபதிகளுடன் பேச்சு நடத்தி இந்த சண்டை மிகப்பெரிய போராக விஸ்வரூபமெடுக்காமல் இருப்பதற்கு தீவிர முனைப்பு காட்டினார் மார்கோ ரூபியோ.

அதன் எதிரொலியாக, இன்று(மே 10) மாலை போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குநர்கள் தரப்பிலிருந்து இந்திய ராணுவ தலைமை இயக்குநரகத்தை தொடர்புகொண்டு பேசி உடனடி போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

அதனைத்தொடர்ந்து, மாலை 5 மணியிலிருந்து போர் நிறுத்தம் அமலானது. தரை வழி, வான் வழி, கடல் வழி என இரு நாட்டு முப்படைகளும் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொள்ள சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மார்கோ ரூபியோ பேசியிருப்பதாவது; “கடந்த 48 மணி நேரமாக அமெரிக்க துணை அதிபர் ஜெ. டி. வான்ஸும் நானும் இந்திய, பாகிஸ்தான் பிரதமர்களுடனும், அவ்விரு நாட்டு மூத்த அதிகாரிகளுடனும், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடனும், பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனீருடனும், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலுடனும் தொடர்ந்து பேச்சு நடத்தினோம்.

இந்தநிலையில், இந்திய, பாகிஸ்தான் அரசுகள் போரை உடனடியாக நிறுத்த சம்மதித்திருக்கின்றன. இரு நாடுகளுக்குமிடையிலான பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொதுவான இடத்தில் விரிவான ஆலோசனை மேற்கொள்ளவும் உடன்பட்டுள்ளன.

இத்தருணத்தில், அமைத்திக்கான பாதையை தேர்ந்தெடுக்க ஆர்வம் காட்டிய பிரதமர்கள் மோடி, ஷெரீப் ஆகியோரின் முழு பங்களிப்பை மேற்கோள் காட்ட விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் - சீனா! டிராகனின் இரட்டை விளையாட்டு!

இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பாகிஸ்தானுக்கு சீனா, துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. இருப்பினும், பாகிஸ்தானுக்கு சீனா முழு ஆதரவையும் வழங்கத் தயங்குகிறது. கா... மேலும் பார்க்க

மங்கோலியாவில் வேகமாகப் பரவும் தட்டம்மை! 3000-ஐ தாண்டிய பாதிப்புகள்!

கிழக்கு ஆசிய நாடான மங்கோலியாவில் 3000-க்கும் அதிகமான தட்டம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.மங்கோலியா நாட்டில் தட்டம்மை தொற்றுப் பரவல் வேகமெடுத்து வரும் சூழலில் அந்நாட்டில் இதுவரை 3,042 பேர் பாதி... மேலும் பார்க்க

ரஷியா - உக்ரைன் இடையே 390 போர்க் கைதிகள் பரிமாற்றம்!

ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் முதல்முறையாக போர்க் கைதிகளின் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. ரஷியா - உக்ரைன் போர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் சூழலில், துருக்கியில் கடந... மேலும் பார்க்க

ஜெர்மனியில் பெண் நடத்திய கத்திக்குத்து சம்பவத்தில் 18 பேர் படுகாயம்!

ஜெர்மனியின் ஹம்பர்க் பகுதியில், ஒரு பெண் நடத்திய கத்திக் குத்துச் சம்பவத்தில் 18 பேர் காயமடைந்தனர். அவர்களில் 4 பேரின் நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவத்த... மேலும் பார்க்க

விதிகளை பூா்த்தி செய்ததால் பாகிஸ்தானுக்கு ரூ.8,527 கோடி கடன்: ஐஎம்எஃப்

விதிகள் மற்றும் இலக்குகளை பாகிஸ்தான் பூா்த்தி செய்ததால் பாகிஸ்தானுக்கு ரூ.8,527 கோடி (1 பில்லியன் டாலா்) கடன் வழங்கப்பட்டதாக சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்தது. பாகிஸ்தானுக்கு விரிவுபடுத்தப்பட்ட ந... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பள்ளிப்பேருந்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பள்ளிப்பேருந்தின் மீதான வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. பலூசிஸ்தான் குஸ்தார் மாவட்டத்தில், கடந்த மே 21 ஆம் தேதியன்று ராணுவப் பள... மேலும் பார்க்க