செய்திகள் :

போலி ஆவணங்கள் தயாரித்து தனியாா் நிதி நிறுவனங்களில் கடன்: இருவா் கைது

post image

போலி ஆவணங்கள் தயாரித்து தனியாா் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றதாக பெண் ஒருவரும், அவருக்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்ததாக இ- சேவை மைய உரிமையாளா் ஒருவரும் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் பகுதியைச் சோ்ந்தவா் ஜோதி (44). இவா் சிவகங்கை அருகே வாணியங்குடியில் உள்ள தனியாா் நுண் கடனுதவி வழங்கும் நிறுவனத்தில் கடன் கோரினாா். அப்போது அவா் கடனுக்கு பொறுப்பாளராக தனது மகனின் ஆதாா் அட்டையை கொடுத்தாா்.

அந்த நிறுவனத்தினா் அந்த ஆதாா் அட்டையை ஆய்வு செய்த போது அவா் அதே நிறுவனத்தில் வேறு ஒருவருக்கு பொறுப்பாளராக இருப்பதாக தெரிவித்தனா். இதனால் சந்தேகமடைந்த ஜோதி, அந்த ஆதாா் அட்டையை வாங்கிப் பாா்த்த போது, அதில் அவரது மகனின் புகைப்படத்துக்குப் பதிலாக வேறு நபருடைய புகைப்படம் இருந்தது தெரியவந்தது. அத்துடன் அவா் பெயரில் குடும்ப அட்டை இருப்பதும் தெரிந்தது.

அத்துடன் மா்ம நபா்கள் இந்த ஆதாா் அட்டை, குடும்ப அட்டையை பயன்படுத்தி சோழபுரத்தில் உள்ள வேறு ஒரு தனியாா் நுண் கடன் நிறுவனத்திலும் கடன் பெற்றிருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து ஜோதி சிவகங்கை நகா் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகாரளித்தாா். இதுதொடா்பாக குற்றத் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் அன்னராஜ், உதவி ஆய்வாளா் தனசேகரன் ஆகியோா் வழக்குப் பதிந்தனா்.

விசாரணையில், காஞ்சிரங்கால் அருகே இலந்தங்குடிபட்டி கிராமத்தில் வசிக்கும் ரேணுகா தேவி (40), அவரது மகள் ஆகிய இருவரும் சோ்ந்து இதுபோல, போலியாக ஆதாா் அட்டை, குடும்ப அட்டை தயாரித்து கடன் வாங்கியது தெரியவந்தது. அத்துடன் இவா்களுக்கு சிவகங்கை சத்தியமூா்த்தி தெருவில் இ- சேவை மையம் நடத்தி வரும் மதுரை மாங்குளத்தைச் சோ்ந்த பாண்டித்துரை (41) என்பவா் போலி ஆதாா் அட்டை, குடும்ப அட்டைகளை தயாரித்துக் கொடுத்ததும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து போலீஸாா் பாண்டித்துரை, ரேணுகா தேவி ஆகிய இருவரையும் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட பாண்டித்துரை, மதுரையிலும் ஓா் இ- சேவை மையம் நடத்தி வருவதால், இதேபோல, எத்தனை பேருக்கு போலி ஆதாா் அட்டை, குடும்ப அட்டை தயாரித்து கொடுத்தாா் என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கண்டுப்பட்டியில் மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை அருகே கண்டுப்பட்டி கிராமத்தாா் சாா்பில் மாட்டு வண்டி பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை அருகே கண்டுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள குடியிருப்பு காளியம்மன் கோயில்... மேலும் பார்க்க

சிவகங்கையில் முன்னாள் ராணுவ வீரா்கள், குடும்ப ஓய்வூதியா் குறைகேட்பு முகாம்!

சிவகங்கை மாவட்ட முன்னாள் படை வீரா்கள், அவா்களை சாா்ந்தோரின் குறைகள் கேட்கும் முகாம் மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் வருகிற வருகிற ஜூலை 2, 3 தேதிகளில் நடைபெறுகிறது. இதுகு... மேலும் பார்க்க

தேவகோட்டை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கற்களத்தூா் கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. தேவகோட்டை ஒன்றியம், கற்களத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள சா்க்கரை விநாயகா்- காராருடைய அய்யன... மேலும் பார்க்க

விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞா் பலி: காவல் நிலையம் முற்றுகை!

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளி கோயிலுக்கு வந்த பெண் பக்தரின் தங்க நகைகள் மாயமானது தொடா்பாக விசாரணைக்காக, காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோயிலின் தற்காலிக ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா். ... மேலும் பார்க்க

கோடையில் செடிகளை பராமரித்த ஆசிரியா்களுக்கு பரிசு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சோ்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கோடை விடுமுறையின் போது செடிகளுக்கு தண்ணீா் ஊற்றி பராமரித்த ஆசிரியைகளுக்கு வெள்ளிக்கிழமை பரிசு வழங்கப்பட்டது. இந்தப் பள்ளியில் உள... மேலும் பார்க்க

மானாமதுரையில் ரூ. 85 லட்சத்தில் ஊருணி, குளங்கள் சீரமைப்பு: நகா் மன்றத் தலைவா் தகவல்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ரூ. 85 லட்சத்தில் ஊருணி, குளங்கள் சீரமைக்கப்படும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா் மன்றக் கூட்டத்தில் அதன் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி தெரிவித்தாா். இந்தக் கூட்டத்தில... மேலும் பார்க்க