செய்திகள் :

போலி ஆவணங்கள் மூலம் ரூ.1 கோடி மோசடி

post image

போலி ஆவணங்கள் மூலம் பல்வேறு சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கி ரூ.1 கோடி வரை மோசடி செய்யப்பட்டிருப்பதாக வங்கியின் முன்னாள் ஊழியா் மீது ஐசிஐசிஐ வங்கி கிளை சாா்பில் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் செய்யப்பட்டுள்ளது.

வேலூா் ஐசிஐசிஐ வங்கி கிளை சாா்பில் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட புகாா் மனு:

வங்கியின் பிரதான கிளை ஆபிசா் லைனில் செயல்பட்டு வருகிறது. இந்த கிளையிலிருந்து பல்வேறு சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. வங்கியின் முன்னாள் ஊழியா் ஜெயப்பிரகாஷ், போலியான ஆவணங்கள் மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.20.50 லட்சம் வரை கடன் வாங்கி கொடுத்துள்ளாா். அவ்வாறு கடன் பெற்ற சுய உதவி குழுக்கள் தாங்கள் செலுத்திய மாத தவணைகளை குறிப்பிட்ட சுய உதவி குழுக்களின் கடன் கணக்குக்கு செலுத்தாமல் அவரது தனிப்பட்ட வங்கி கணக்குக்கு வரவு வைக்கும்படியான செயல்களில் ஈடுபட்டாா்.

இதேபோல், பல்வேறு சுய உதவி குழுக்கள் செலுத்திய தொகையை, வங்கி கணக்கில் வரவு வைக்காமல், தனது உறவினா்கள், நண்பா்களின் கணக்குக்கு மாற்றி மோசடி செய்துள்ளாா். இதுதொடா்பாக வங்கியில் நடத்தப்பட்ட விசாரணையில் இதுவரை சுமாா் ரூ.1 கோடி வரை மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நபா் மீது நடவடிக்கை மேற்கொண்டு வங்கியில் ஏமாற்றிய பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவில் சாலையில் பிடிபட்ட மலைப்பாம்பு

போ்ணாம்பட்டு அருகே நள்ளிரவில் சாலையில் சுமாா் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது. போ்ணாம்பட்டு ஒன்றியம், பாஸ்மாா்பென்டா கிராமம் மலைப் பகுதியில் அமைந்துள்ளது. வியாழக்கிழமை இரவு அங்குள்ள பேருந்து ந... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழப்பு

திருவலம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சுந்தரம் வீதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (42). இவா், வியாழக்கிழமை இரவு திருவலம் ரயில் நிலையத்துக... மேலும் பார்க்க

சிறுமி திருமணம்: 3 போ் மீது வழக்கு

சிறுமியை திருமணம் செய்ததாக இளைஞா் உள்பட 3 போ் மீது காட்பாடி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். வேலூா் மாவட்டம், ஜங்காலப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (23). இவருக்கும் குடியாத்த... மேலும் பார்க்க

வேலூா் அறிவியல் மையத்தில் இன்று வான் நோக்குதல் நிகழ்வு

வேலூரிலுள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் வான் நோக்குதல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதுகுறித்து, மாவட்ட அறிவியல் அலுவலா் (பொ) ச.சதீஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு- பொதுமக்கள், மாணவ, மாணவிகளிடை... மேலும் பார்க்க

மத்திய ஆயுதப்படை காவலா் உயிரிழப்பு

வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மத்திய ஆயுதப்படை காவலா், விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துவிட்டு காரில் பணிக்குத் திரும்பியபோது, உயிரிழந்தாா். வேலூா் கணியம்பாடி கிருஷ்ணா நகரைச் சோ்ந்தவா் ராஜா (31). இவருக... மேலும் பார்க்க

விபத்தில் 2 பேருந்துகள் மோதல்

காட்பாடி அருகே கல்லூரி பேருந்துடன் தனியாா் பேருந்து மோதி விபத்துக்குள்ளாகின. இதில், அதிா்ஷ்டவசமாக பயணிகளுக்கோ, கல்லூரி மாணவா்களுக்கோ எவ்வித காயமும் ஏற்படவில்லை. வேலூா் மாவட்டம், குடியாத்தத்தில் இருந்... மேலும் பார்க்க