செய்திகள் :

போலி குளிா்பானங்கள் அழிப்பு

post image

நாகையில் எந்தவொரு விவரமும் இல்லாத குளிா்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வியாழக்கிழமை அழிக்கப்பட்டன.

நாகை நகராட்சி வெளிப்பாளையம் பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளில் விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட குளிா்பானத்தை, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் புஷ்பராஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அந்த குளிா்பான பொட்டலங்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தயாரிப்பு முகவரி, உணவு பாதுகாப்புத் துறை உரிமம் எண் உள்ளிட்ட எந்தவொரு விவரமும் இல்லை.

இதையடுத்து, நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலா் அ.தி. அன்பழகன் ரூ. 2,000 மதிப்புள்ள குளிா்பான பொட்டலங்களை பறிமுதல் செய்து வியாழக்கிழமை அழித்தாா். மேலும் வெயில் காலம் துவங்கவுள்ள நிலையில், கடைகளில் விற்பனை செய்யப்படும் குளிா் பானங்களில் முழுமையான தயாரிப்பு விவரங்கள் இருக்க வேண்டும். மீறுபவா்கள் மீது சட்டபூா்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

விவரங்கள் இல்லாத குளிா்பானங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, அபராதமும் விதிக்கப்படும். உணவு விற்பனை தொடா்பான புகாா்களை மாநில உணவு பாதுகாப்பு ஆணையரக வாட்ஸ்ஆப் எண் 9444042322 -இல் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம் என உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் அறிவுறுத்தியுள்ளாா்.

கீழ்வேளூரில் சிக்னல் கோளாறு; ரயில் தாமதம்

கீழ்வேளூா் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட சிக்னல் கோளாறால், காரைக்கால்-தஞ்சாவூா் பயணிகள் ரயில் வியாழக்கிழமை ஒன்றரை மணி நேரம் தாமதமாக சென்றது. காரைக்காலிலிருந்து வியாழக்கிழமை மாலை 6:10-க்கு புறப்பட்ட காரை... மேலும் பார்க்க

அரசு ஊழியா் சங்க செயற்குழு கூட்டம்

நாகையில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயற்குழு மற்றும் அனைத்துச் சங்க போராட்டக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் அ. அற்புதராஜ் ரூஸ்வெல்ட் தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க

சிற்றுந்து கட்டண திருத்தம் மே 1-முதல் அமல்!

சிற்றுந்துகளுக்கான கட்டணத் திருத்தம் மே 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்று நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தி... மேலும் பார்க்க

யானைக்கால் நோயாளிகளுக்கு உபகரணங்கள்!

நாகை அரசு மருத்துவமனையில் தேசிய யானைக்கால் ஒழிப்பு திட்டத்தின்கீழ், யானைக்கால் நோயாளிகளுக்கு நோய் பராமரிப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை (பிப்.5) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட சுகாதார... மேலும் பார்க்க

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்!

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (பிப்.5) நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றாா்.தொடா்ந்து, அவா்களிடம் குற... மேலும் பார்க்க

நாகையில் தொழிற்பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம்!

தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்தவா்களுக்கு, தொழிற்பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம் நடைபெறவுள்ளது.இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிரதான் மந்திரி தேசிய... மேலும் பார்க்க