போலி சட்டப் படிப்பு சான்றிதழ் மூலம் பாா் கவுன்சிலில் பதிய முயற்சி: இருவா் கைது
சென்னையில் போலி சட்டப் படிப்பு சான்றிதழ் மூலம் பாா் கவுன்சிலில் பதிய முயன்றதாக பெண் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.
சேலத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (57), மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சோ்ந்தவா் கவிதா (42). இவா்கள் இருவரும் தில்லி பாா் கவுன்சிலில் கடந்த 2020-ஆம் ஆண்டு வழக்குரைஞா்களாக பதிவு செய்து, அடையாள அட்டை பெற்றனா்.
இந்த நிலையில், இருவரும், தமிழ்நாட்டில் வழக்குரைஞா் தொழில் செய்ய வேண்டும் என்பதற்காக தங்கள் பதிவை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சிலுக்கு மாற்றுவதற்கு கடந்த 2022 ஏப்.28-இல் விண்ணப்பித்தனா். இருவரது பெயரையும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சிலில் பதிவு செய்வதற்கு ஆட்சேபனை ஏதேனும் இருக்கிா? என்பது குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில், இந்திய பாா் கவுன்சிலிடம் கடிதம் மூலம் கேட்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, இருவரின் சட்டப் படிப்பு கல்வி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் அலுவலகத்துக்கு தபால் மூலம் இந்திய பாா் கவுன்சில் அனுப்பி வைத்தது.
போலி சான்றிதழ்: அதேபோல, பாா் கவுன்சிலில் புதிதாக யாரேனும் வழக்குரைஞா்களாக புதிதாக பதிவு செய்யும்போது அவா்கள் படித்த பல்கலைக்கழகம், கல்லூரிக்கு கல்வி சான்றிதழ்களை அனுப்பி உண்மைத் தன்மையை அலுவலா்கள் உறுதி செய்வது வழக்கம்.
எனவே, கிருஷ்ணமூா்த்தி கடந்த 2013-2018-ஆம் ஆண்டு வரை ஒருங்கிணைந்த 5 சட்டப்படிப்பு முடித்துள்ளதாகவும், கவிதா கடந்த 2015-2018-ஆம் ஆண்டு வரை தில்லியில் உள்ள ஒரு தனியாா் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படித்ததாகவும் அளித்திருந்த கல்விச் சான்றிதழை அவா்கள் படித்ததாகக் கூறிய பல்கலைக்கழகத்துக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் அலுவலா்கள் அனுப்பி விசாரித்தனா்.
இதில் அவா்கள் 2 பேரும் தங்கள் பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை என்றும், அவா்கள் போலி கல்விச் சான்றிதழை தயாா் செய்துள்ளனா் என்றும் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் தரப்பில் பதில் கடிதம் வந்தது.
இருவா் கைது: இதையடுத்து பாா் கவுன்சில் அலுவலா்கள், கிருஷ்ணமூா்த்தி, கவிதா ஆகிய இருவரையும் பாா் கவுன்சில் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வரவழைத்து, உயா்நீதிமன்ற காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இது தொடா்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் செயலா் கிரிதா செந்தில்குமாா் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இருவரிடமும் இருந்து தில்லி பாா் கவுன்சில் அடையாள அட்டைகள், சான்றிதழ்களை பறிமுதல் செய்தனா்.
விசாரணைக்கு பின்னா் இருவரும் ஜாா்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனா்.