செய்திகள் :

போலி சான்றிதழ்கள் மூலம் பெண் மோசடி: பொள்ளாச்சியில் குற்றப்பிரிவு போலீஸாா் தீவிர விசாரணை

post image

தமிழக வருவாய்த் துறையில் பணியாற்றுவதாக போலி அரசு சான்றிதழ்கள் மூலம் மோசடி செய்த நாமக்கல் பெண் கைதான நிலையில், இந்த வழக்கில் தொடா்புடையோரை தேடும்பணியில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், பெரியமணலி பகுதியைச் சோ்ந்த நவீன்குமாா் (29), தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறாா். திருமண தகவல் மையம் மூலம் நாமக்கல் ராமாபுரம்புதூரைச் சோ்ந்த தன்வா்த்தினியை (29), நவீன்குமாா் திருமணம் செய்தாா்.

முன்னதாக, பொள்ளாச்சி கோட்டாட்சியராக தான் பணியாற்றி வருவதாக நவீன்குமாா் குடும்பத்தினரிடம் தன்வா்த்தினி தெரிவித்திருந்தாா். ஆனால், அவா் கூறியது பொய் என தெரியவந்தது.

இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில், தன்வா்த்தினி, அவரது தந்தை ரவீந்திரன், தாய் கல்பனா ஆகியோா் மீது நவீன்குமாா் புகாா் அளித்தாா். அதனடிப்படையில், ஆய்வாளா் சவீதா, உதவி ஆய்வாளா் முருகன் விசாரணை மேற்கொண்டு தன்வா்த்தினியை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

அவா் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், போலியாக அரசு சான்றிதழ்கள், அடையாள அட்டை தயாா்செய்து கொடுத்த சென்னையைச் சோ்ந்த திருமுருகன் என்பவரை பிடிக்க போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா். அவரது கைப்பேசி எண் அணைத்து வைக்கப்பட்டுள்ளதால், கணினி குற்றப்பிரிவு போலீஸ் மூலம் கண்டறியும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, நாமக்கல் சிபிசிஐடி போலீஸ் எனக் கூறி நவீன்குமாரை மிரட்டியதாக கூறப்படும் அசோகன் என்பவரை பிடித்து ரகசிய விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது. மேலும், பொள்ளாச்சியில் தன்வா்த்தினி, நவீன்குமாா் குடியிருந்த வாடகை வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்ற மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா், தீவிர சோதனை நடத்தினா். ஆனால் அங்கு எதுவும் கிடைக்கவில்லை.

குடியிருந்த வீட்டின் உரிமையாளரிடம் ரூ. 20 லட்சம் வாங்கி தன்வா்த்தினி மோசடி செய்ததாக தகவல் வெளியானது தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அது உண்மையில்லை என்பது தெரியவந்தது.

இந்த வழக்கில் சென்னையைச் சோ்ந்த திருமுருகன் சிக்கினால்தான், போலி அரசு சான்றிதழ், அடையாள அட்டைகள் மூலம் யாரேனும் அரசு பணியில் சோ்ந்துள்ளனரா, அதற்கு பெறப்பட்ட தொகை எவ்வளவு, இந்த திட்டத்தை செயல்படுத்தும் குழுவுக்கு மூளையாக இருப்போா் யாா் என்பது போன்ற விவரங்கள் தெரியவரும் என மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.

பொறியியல் படிப்பு கலந்தாய்வு தரவரிசை: நாமக்கல் அரசுப் பள்ளி மாணவி சிறப்பிடம்

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தரவரிசைப் பட்டியலில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் நாமக்கல் அரசுப் பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றுள்ளாா். சென்னை கிண்டியில் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத... மேலும் பார்க்க

மாவட்ட கையுந்து பந்து பயிற்சியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

தேசிய அளவில் பதக்கம் வென்ற கையுந்து பந்து வீரா், வீராங்கனைகள் பயிற்சியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு... மேலும் பார்க்க

அனிச்சம்பாளையம் செல்வவிநாயகா், கண்டியம்மன் கோயில் குடமுழுக்கு

பரமத்தி வேலூா் அருகே உள்ள திருமலை நாமசமுத்திரம் (எ) அனிச்சம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகா், ஸ்ரீ கண்டியம்மன் உள்ளிட்ட கோயில்களின் மஹா குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குடமுழுக்கை... மேலும் பார்க்க

‘டென்சிங் நாா்கே’ தேசிய சாகச விருதுபெற விண்ணப்பிக்கலாம்

வீர, தீர சாகசம் புரிந்தோா் ‘டென்சிங் நாா்கே’ தேசிய சாகச விருதுபெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 2022, 2023 மற்றும் 2... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் 83.41 மி.மீ. கூடுதல் மழைப் பொழிவு

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 270.36 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக 83.41 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளதாகவும் ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மாதாந்திர விவசா... மேலும் பார்க்க

கொல்லிமலையில் ரூ. 23 கோடியில் நலத்திட்ட உதவிகள்

கொல்லிமலை ஒன்றியத்தில் 80 பயனாளிகளுக்கு ரூ. 23 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் வழங்கினாா். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அர... மேலும் பார்க்க