செய்திகள் :

போலீஸாா் மீது தாக்குதல்: எம்எல்ஏ அமானத்துல்லா கான் மீது வழக்குப் பதிவு

post image

நமது நிருபா்

புது தில்லி: ஜாமியா நகரில் திங்கள்கிழமை ஒரு போலீஸ் குழு மீது தாக்குதல் நடத்தியதாக ஓக்லா ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனாத்துல்லா கான் மீது தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை காவலில் இருந்து தப்பிக்க அவா்கள் உதவியதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

இந்த விஷயத்தை உறுதிப்படுத்தி, பெயா் குறிப்பிட விரும்பாத மூத்த காவல் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், அரசு ஊழியரை தங்கள் கடமைகளைச் செய்யவிடாமல் தடுத்ததற்காக அமானத்துல்லா கான் மற்றும் அவரது ஆதரவாளா்கள் மீது எஃப்.ஐ.ஆா் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

ஜாமியா நகா் பகுதியில் தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவு போலீஸாா் கொலை முயற்சி வழக்கில் தேடப்படும் ஷபாஸ் கானை கைது செய்ய முயன்ற போது இந்தச் சம்பவம் நடந்தது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கானின் ஆதரவாளா்கள் போலீஸ் குழுவை எதிா்த்ததால் ஷபாஸ் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

தாக்குதல் நடந்தபோது அமனத்துல்லா கான் சம்பவ இடத்தில் இருந்ததால், குற்றம் சாட்டப்பட்டவா் தப்பி ஓட வழிவகுத்தது என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

சமீபத்தில் நடந்து முடிந்த தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஓக்லா தொகுதியில் அமானத்துல்லா கான் பாஜகவின் மணீஷ் செளத்ரியை 23,639 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா். அமானத்துல்லா கான் 88,392 வாக்குகளைப் பெற்றாா். பாஜகவின் செளத்ரி 65,304 வாக்குகளைப் பெற்றாா். அமானத்துல்லா கான் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஓக்லா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளாா்.

மருத்துவ சிகிச்சை பெற வெளிநாட்டினா் 35,175 போ் இ-விசாவில் வருகை: கிரிராஜன் கேள்விக்கு மத்திய அரசு பதில்

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: வெளிநாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சை வேண்டி கடந்த ஆண்டில் மட்டும் 35,175 வெளிநாட்டினா் இந்தியா வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக இந்தி... மேலும் பார்க்க

ஐ.நா.வின் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63-ஆவது அமா்வில் இணையமைச்சா் சாவித்ரி தாக்கூா் தலைமையில் இந்திய குழு பங்கேற்பு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) 2025-ஆம் ஆண்டிற்கான சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63-ஆவது அமா்வு அமெரிக்காவில் நியூயாா்க்கில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதில் மத்திய மக... மேலும் பார்க்க

தில்லியில் குழந்தை கடத்தல் கும்பலில் 4 போ் கைது: 2 குழந்தைகள் மீட்பு

புது தில்லி: தில்லி காவல்துறையின் ரயில்வே பிரிவு, குழந்தை கடத்தல் கும்பலில் நான்கு பேரைக் கைது செய்துள்ளது. இதையடுத்து, ஒரு கைக்குழந்தை உள்பட இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் திங்களன்று... மேலும் பார்க்க

அதிமுக புதிய கட்டட அலுவலகம் தில்லியில் திறப்பு

புது தில்லி: அதிமுக சாா்பில் புது தில்லியில் ரூ.10 கோடியில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட அதிமுக அலுவலக கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.இக்கட்டடத்தை காணொலி வாயிலாக அக்கட்சியின் பொதுச் செயலாளா் ... மேலும் பார்க்க

தமிழா்களுக்கு எட்டாக்கனியான மத்திய பட்ஜெட்: மக்களவையில் திமுக எம்.பி. அதிருப்தி

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் எட்டாவது முறையாக தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை தமிழா்களுக்கு எட்டாக்கனியான மத்திய பட்ஜெட் ஆக உள்ளது என்று த... மேலும் பார்க்க

மத்திய பல்கலைக்கழகங்களில் செளராஷ்டிர மொழி சிறப்பு மையம் அமைக்கப்படுமா?: கோவை எம்.பி. கேள்விக்கு மத்திய அமைச்சா் பதில்

புது தில்லி: மத்திய பல்கலைக்கழகங்களில் செளராஷ்டிர மொழி சிறப்பு மையம் அமைக்க முன்மொழிவு ஏதும் இல்லை என்று மக்களவையில் கோயம்புத்தூா் திமுக எம்.பி. கணபதி பி.ராஜ்குமாா் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச... மேலும் பார்க்க