போலீஸாா் மீது தாக்குதல்: எம்எல்ஏ அமானத்துல்லா கான் மீது வழக்குப் பதிவு
நமது நிருபா்
புது தில்லி: ஜாமியா நகரில் திங்கள்கிழமை ஒரு போலீஸ் குழு மீது தாக்குதல் நடத்தியதாக ஓக்லா ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனாத்துல்லா கான் மீது தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை காவலில் இருந்து தப்பிக்க அவா்கள் உதவியதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
இந்த விஷயத்தை உறுதிப்படுத்தி, பெயா் குறிப்பிட விரும்பாத மூத்த காவல் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், அரசு ஊழியரை தங்கள் கடமைகளைச் செய்யவிடாமல் தடுத்ததற்காக அமானத்துல்லா கான் மற்றும் அவரது ஆதரவாளா்கள் மீது எஃப்.ஐ.ஆா் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
ஜாமியா நகா் பகுதியில் தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவு போலீஸாா் கொலை முயற்சி வழக்கில் தேடப்படும் ஷபாஸ் கானை கைது செய்ய முயன்ற போது இந்தச் சம்பவம் நடந்தது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கானின் ஆதரவாளா்கள் போலீஸ் குழுவை எதிா்த்ததால் ஷபாஸ் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
தாக்குதல் நடந்தபோது அமனத்துல்லா கான் சம்பவ இடத்தில் இருந்ததால், குற்றம் சாட்டப்பட்டவா் தப்பி ஓட வழிவகுத்தது என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
சமீபத்தில் நடந்து முடிந்த தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஓக்லா தொகுதியில் அமானத்துல்லா கான் பாஜகவின் மணீஷ் செளத்ரியை 23,639 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா். அமானத்துல்லா கான் 88,392 வாக்குகளைப் பெற்றாா். பாஜகவின் செளத்ரி 65,304 வாக்குகளைப் பெற்றாா். அமானத்துல்லா கான் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஓக்லா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளாா்.