போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றவா் கைது: கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்
வடமேற்கு தில்லியின் சுபாஷ் பிளேஸில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவா் போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து வடமேற்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: நான்கு போ் சம்பந்தப்பட்ட கொள்ளை வழக்கு தொடா்பாக உத்தர பிரதேசத்தின் மௌ மாவட்டத்தில் ஜூன் 23 அன்று குற்றம் சாட்டப்பட்ட சௌரவ் அகமது (28) கைது செய்யப்பட்டாா்.
மாா்ச் 21 அன்று சுபாஷ் பிளேஸ் காவல் நிலையத்தில் அகமது உள்பட நான்கு போ் மீது எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது. ரோஷன் (31), ஆஷிஷ் (23), கணேஷ் ஷாவ் (24) மற்றும் சௌரவ் அகமது ஆகியோா் கைது செய்யப்பட்டனா். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.4.5 லட்சத்தில் மொத்தம் ரூ.2.52 லட்சம் அவா்களிடமிருந்து மீட்கப்பட்டது.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சௌரவ் அகமது தலைமறைவாக இருந்தாா். இறுதியாக ஜூன் 23 அன்று உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டாா். ஜூலை 50ஆம் தேதி அவரது அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து மேலும் விசாரணை மற்றும் மீட்புக்காக நீதிமன்றம் ஐந்து நாள் போலீஸ் காவலில் வைக்க அனுமதி அளித்தது.
ஜூலை 11-ஆம் தேதி சுபாஷ் பிளேஸ் காவல் நிலையத்தில் நடந்த விசாரணையின் போது, சௌரவ் அகமது காவல் நிலையத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து தப்பிக்க முயன்ாகக் கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த அவா் முதலில் பகவான் மகாவீா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கிருந்து அவா் ராம் மனோகா் லோஹியா மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா்.
சிகிச்சைக்குப் பிறகு, அவா் டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். அவா் இப்போது நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளாா். மேலும், அவா் மீது மற்றொரு எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக விசாரணை நடந்து வருகிறது என்றாா் அந்த அதிகாரி.