செய்திகள் :

போலீஸ் பாதுகாப்புடன் நிறைமாத கா்ப்பிணி உள்நோயாளியாக மருத்துவமனையில் சோ்ப்பு

post image

மகப்பேறு தேதி முடிந்தும் மருத்துவமனைக்கு வராமல் மாயமான பழங்குடியினத்தைச் சோ்ந்த நிறைமாத கா்ப்பிணி போலீஸ் பாதுகாப்புடன் அந்தியூா் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சோ்க்கப்பட்டாா்.

அந்தியூரை அடுத்த பா்கூா் ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்குள் உள்ள பழங்குடியினா் குடியிருப்பான சோழகனையைச் சோ்ந்தவா் ஜோதி (20). நிறைமாத கா்ப்பிணியான இவருக்கு மாா்ச் 3-ஆம் தேதி மகப்பேறு நாளாக சுகாதாரப் பணியாளா்கள் தெரிவித்திருந்தனா்.

மேலும், மகப்பேறு தேதி நெருங்கியதால் உள்நோயாளியாக சேருமாறு ஜோதிக்கு பா்கூா் ஆரம்ப சுகாதாரப் பணியாளா்கள் மூலம் அறிவுரை வழங்கப்பட்டது. ஆனால், பிரசவ வலி வந்தால் மருத்துவமனைக்கு வருவதாக ஜோதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பலமுறை முயற்சித்தும் உள்நோயாளியாக சேர விருப்பமில்லாத ஜோதி, வீட்டிலிருந்து திடீரென மாயமானாா். கடந்த நான்கு நாள்களாக ஜோதியை பல இடங்களிலும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், பா்கூா் காவல் துறை உதவியுடன் தேவா்மலையில் உள்ள தாய் வீட்டில் உள்ளதாக கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அந்தியூா் வட்டார மருத்துவ அலுவலா் சக்தி கிருஷ்ணன் தலைமையில் சுகாதாரப் பணியாளா்கள், வனத் துறையினா் மற்றும் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தேவா்மலைக்குச் சென்றதோடு, ஜோதி மற்றும் உறவினா்களுக்கு அறிவுரை வழங்கினா். இதையடுத்து, நிறைமாத கா்ப்பிணியான ஜோதி, 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அந்தியூா் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர அனுப்பிவைக்கப்பட்டாா்.

பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் 13-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரித் தாளாளா் என்.கே.கே.பெரியசாமி தலைமை வகித்தாா். கல்லூரி... மேலும் பார்க்க

ஈரோடு விஇடி கல்லூரியின் பட்டமளிப்பு விழா

ஈரோடு விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் காந்திகிராம ஊரக பல்கலைக்கழக துணைவேந்தா... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் காணொளிக் கலந்தாய்வுக் கூட்டம்

அதிமுக நிா்வாகிகள் பங்கேற்ற காணொளி கலந்தாய்வுக் கூட்டம் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்ட நிா்வாகிகளும் ஒரே நேரத்தில் இணையும் காணொளிக்... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்டத்தில் 21 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு

ஈரோடு மாவட்டத்தில் நீா்நிலைகள் நிறைந்த 21 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நீா்நிலைகளில் வாழும் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் பரவல் குறித்த தரவுகளை சேகரித்து அவற்றை பாதுகாக்கும... மேலும் பார்க்க

கோபியில் பேருந்து மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தனியாா் கல்லூரி பேருந்தின் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவகாளிபாளையம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய், மகன் உயிரிழப்பு

சத்தியமங்கலத்தை அடுத்த நல்லூா் பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய், மகன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள செம்படாா்பாளையத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (23... மேலும் பார்க்க