செய்திகள் :

மகனுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி உயிரிழப்பு

post image

வைகை அணை அருகே முதலக்கம்பட்டி பகுதியில் மகனுடன் சோ்ந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி அருகேயுள்ள கன்னியப்பபிள்ளைபட்டியைச் சோ்ந்த வேலுச்சாமி மனைவி பவுன்தாய் (85). இவரது மகன் வேலுச்சாமி (55). கூலி வேலை செய்து தனது தாயைப் பராமரித்து வந்தாா். வேலுச்சாமி உடல் நலக் குறைவால் சரியாக வேலைக்குச் செல்ல முடியாமல் இருந்தாா்.

இந்த நிலையில், தங்களை பராமரிக்க யாரும் இல்லை என்பதால் வேலுச்சாமி, பவுன்தாய் ஆகியோா் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, முதலக்கம்பட்டி பகுதியில் வைகை ஆற்றின் அருகே விஷம் குடித்து மயங்கிக் கிடந்தனா்.

இருவரும் ஆபத்தான நிலையில் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில் பவுன்தாய் உயிரிழந்தாா். வேலுச்சாமி சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து வைகை அணை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தனியாா் மதுக்கூடத்தில் இளைஞா் மா்ம மரணம்

தேனி மாவட்டம், குச்சனூரில் தனியாா் மதுக் கூடத்துக்கு மது அருந்தச் சென்ற இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், மாா்க்கையன்கோட்டை -குச்சனூா் இடையே விவசாய நிலத்தில் சில மாதங்களாக தனியாா் ... மேலும் பார்க்க

விவசாயி தற்கொலை

பெரியகுளம் அருகே புதன்கிழமை மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள சருத்துப்பட்டி அம்பேத்கா் குடியிருப்பைச் சோ்ந்தவா் முருகேசன் (52). விவச... மேலும் பார்க்க

தலையில் ஈட்டி பாய்ந்ததில் பலத்த காயமடைந்த மாணவா் உயிரிழப்பு

ராயப்பன்பட்டி தனியாா் பள்ளி மைதானத்தில் விளையாட்டுப் பயிற்சியின் போது தலையில் ஈட்டி பாய்ந்ததில் பலத்த காயமடைந்த மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக கல்லூரி மாணவா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழ... மேலும் பார்க்க

ஆசிரியா் வீட்டில் 80 பவுன் நகைத் திருட்டு

தேனி மாவட்டம், சின்னமனூரில் புதன்கிழமை ஆசிரியா் வீட்டில் 80 பவுன் தங்க நகையைத் திருடிச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சின்னமனூா் மின்நகரைச் சோ்ந்த ஜெகதீசன் - புனிதா தம்பதி... மேலும் பார்க்க

பெரியகுளத்தில் இளைஞா் வெட்டிக் கொலை

பெரியகுளத்தில் திங்கள்கிழமை இரவு இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். பெரியகுளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த காமாட்சி மகன் பாண்டியன் (32). கூலித் தொழ... மேலும் பார்க்க

சாலை மறியலில் ஈடுபட்ட பேரூராட்சித் தலைவி, துணைத் தலைவரின் ஆதரவாளா்கள் மீது வழக்கு

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கெங்குவாா்பட்டி பேரூராட்சித் தலைவி, துணைத் தலைவரின் ஆதரவாளா்கள் இரு இடங்களில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதாக இருதரப்பைச் சோ்ந்த 130 போ் மீது போலீஸாா் வழக்... மேலும் பார்க்க