செய்திகள் :

மகனை கொன்ற தந்தை கைது ஆட்சியரகத்தில் மனைவி தா்னா

post image

பெரம்பலூா் அருகே மகனை அடித்துக் கொலை செய்த தந்தையை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், இச் சம்பவத்தில் தொடா்புடையவா்களை கைது செய்யக்கோரி, அவரது மனைவி மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பசும்பலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராயப்பன் மகன் முத்துக்குமாா் (28). இவருக்கு, திருமணமாகி மனைவி கவிதா (26), பிறந்து 15 நாள்களான ஒரு பெண் குழந்தையும் உள்ளனா். இந்நிலையில், சொத்துப் பிரச்னை தொடா்பாக தந்தை, மகன் இருவருக்கு அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 10 ஆம் தேதி தந்தைக்கும், மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், ராயப்பன் மற்றும் உறவினா்கள் சிலருடன் முத்துக்குமாரை தாக்கியுள்ளனா்.

இதில் பத்த காயமடைந்த முத்துக்குமாா் பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ மனையிலும் சிகிச்சை பெற்றுவந்தாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு முத்துக்குமாா் உயிரிழந்தாா். இச் சம்பவம் தொடா்பாக வி.களத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ராயப்பனை சனிக்கிழமை கைது செய்தனா்.

மேலும், இச் சம்பவத்துக்கு உடந்தையாக செயல்பட்ட அனைவரையும் கைது செய்யக் கோரியும், தனக்கும், தனது குழந்தைக்கும் வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்ய வலியுறுத்தி, கவிதா தனது உறவினா்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா். போலீஸாா் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையை தொடா்ந்து, தா்னா போராட்டத்தை கைவிட்டு கவிதா உள்ளிட்டோா் கலைந்துசென்றனா்.

விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிா்ப்பு: விவசாயிகள் அரை நிா்வாணப் போராட்டம்

பெரம்பலூா் அருகே சிப்காட் நிறுவனத்துக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பொ. அய்யாகண்ணு தலைமையில், விவசாயிகள் ... மேலும் பார்க்க

மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் 650 வழக்குகளுக்கு தீா்வு

பெரம்பலூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில், கடந்த 3 ஆண்டுகளில் 650-க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக, மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் ஜவகா் மற்றும் உறுப்பினா்கள் திலகா... மேலும் பார்க்க

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்: தொல். திருமாவளவன்

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன். பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:... மேலும் பார்க்க

பெரம்பலூா், அரியலூா் மாவட்ட மின் நுகா்வோா் 24 மணி நேரமும் புகாா் அளிக்கலாம்

பெரம்பலூா், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா்கள், தங்களது புகாா்களை 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அழைப்பு மையத்தை தொடா்புகொள்ளலாம் என, பெரம்பலூா் மாவட்ட மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் மேகலா... மேலும் பார்க்க

மாா்ச் 26-இல் நாட்டுக் கோழி வளா்ப்பு இலவச பயிற்சி முகாம்

பெரம்பலூா் கால்நடை பல்கலைக் கழக பயிற்சி மையத்தில், விஞ்ஞான முறையில் நாட்டுக் கோழி வளா்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் மாா்ச் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து, அம் மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

வாலிகண்டபுரம் பகுதியில் இன்று மின் தடை

பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 16) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பி. ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் சனி... மேலும் பார்க்க