செய்திகள் :

மகப்பேறு விடுமுறைகள், ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.15,000 - மக்கள் தொகையை அதிகரிக்க ஆந்திரா முடிவு?

post image

நாட்டில் தென்மாநிலங்களில் மக்கள் தொகை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் தென்மாநிலங்களில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு உட்பட சில மாநிலங்கள் தங்களது மாநிலத்தில் மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க கூடாது என்று போர்க்கொடி தூக்கினர்.

ஆந்திராவிலும் நாளுக்கு நாள் மக்கள் தொகை குறைந்து கொண்டே செல்கிறது. இதையடுத்து தொகுதி எண்ணிக்கை உட்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதால் ஆந்திரா அரசு மக்கள் தொகையை அதிகரிக்க அதிரடி நடவடிக்கையை தொடங்கி இருக்கிறது.

இதற்காக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பல புதிய திட்டங்களை அறிவிக்க இருகிறார். இதன்படி உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடுபவர்கள் குடும்பத்தில் இனி இரண்டு குழந்தைகள் மட்டும் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

மக்கள் தொகை

இரண்டு குழந்தைக்கும் அதிகமான எண்ணிக்கையில் குழந்தைகள் இருந்தாலும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியும். அதோடு அரசு பணியில் இருக்கும் பெண்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் மகப்பேறு விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் அக்குழந்தையின் தாயாருக்கு ரூ.15000 சன்மானமாக கொடுக்கப்படும்.

குழந்தைகளை பராமரிக்க பெண்கள் பணிபுரியும் இடத்தில் கட்டாயம் குழந்தைகள் கவனிப்பு மையம் இருக்கவேண்டும் என்று அடுக்கடுக்காக சந்திரபாபு நாயுடு சலுகைகளை அறிவித்து இருக்கிறார். மேலும் இரண்டுக்கும் அதிகமான குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கும் நிதி சலுகைகள் அறிவிக்கப்படும் என்று சந்திரபாபு நாயுடு தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சிக்கிம் அரசு இதற்கு முன்பு 2023ம் ஆண்டு இரண்டுக்கும் அதிகமான குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு சலுகைகளை அறிவித்து இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

பட்டா மாறுதலுக்கு லஞ்சமா? - அலைக்கழிக்கப்பட்ட 90 வயது மூதாட்டி உயிரிழந்த சோகம்.. நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் செல்லம்மாள் (90). இவருக்கு 3 மகன், 2 மகள். ஒரு மகன் இறந்துவிட்டார். இந்நிலையில், மூதாட்டிக்குச் சொந்தமாக 110 ஏக்கர் நிலம் உள்ளது. அதில், ... மேலும் பார்க்க

ஈரோடு: "பயிர்களுக்கு இடையே முளைக்கும் களைதான் அதிமுக" - ஸ்டாலின் குற்றச்சாட்டின் பின்னணி என்ன?

ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அருகே வேளாண்மை-உழவர் நலத் துறை சார்பில் இரண்டு நாள் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு புதன்கிழமை தொடங்கியது.இதை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துப் பேசுகையில், "தி.மு.க. ... மேலும் பார்க்க

தாமலேரிமுத்தூர்: `விபத்து' அபாயத்தைச் சுட்டிக்காட்டிய விகடன்; நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே தாமலேரிமுத்தூர் கூட்ரோடு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 179A, ஆம்பூர், வேலூர், கிருஷ்ணகிரி, சென்னை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகளால் பரவலாக பயன்படு... மேலும் பார்க்க

Rain Alert: இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன?

இன்று (11-06-2025) வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்... மேலும் பார்க்க

கர்நாடகா: 'அலைச்சல் இல்லை; வரிசையில் நிற்க வேண்டாம்' - கவனம் பெறும் இல்லம் தேடி மருத்துவம் திட்டம்!

அடித்தட்டு மக்களுக்கும் மருத்துவம் சென்று சேருவதை உறுதி செய்யும் வகையில் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது இல்லத்திலேயே சிகிச்சை அளிக்கும் விதமாக இலவச வெளிநோயாளர் பிரிவு (OPD) சேவைகளைத்... மேலும் பார்க்க

"திமுக ஆட்சி விளம்பரத்திற்கு மட்டுமே; பள்ளிக்கல்வித்துறை சீரழிந்து வருகிறது" - நயினார் விமர்சனம்

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு மறுத்து வருவதை திமுக அமைச்சர்களும், முதல்வர் ஸ்டாலினும் தொடர்ந்து கண்டித்து வருகின்றனர். ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்படி தமிழக அரசுக்கு வழங்கப்பட வ... மேலும் பார்க்க