செய்திகள் :

மகளிர் பிரீமியர் லீக்: இறுதிக்கட்ட போட்டிகளை தவறவிடும் யுபி வாரியர்ஸ் வீராங்கனை!

post image

மகளிர் பிரீமியர் லீக்கின் இறுதிக்கட்ட போட்டிகளில் யுபி வாரியர்ஸ் அணியில் பிரபல வீராங்கனை விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தொடரில் இதுவரை 4 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதையும் படிக்க: தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க பாபர் அசாம்தான் சரியான நபர்: முகமது ரிஸ்வான்

யுபி வாரியர்ஸுக்கு பின்னடைவா?

இலங்கை அணியின் நட்சத்திர வீராங்கனைகளில் ஒருவரான சமாரி அத்தப்பத்து, யுபி வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கான இலங்கை அணியின் கேப்டனாக அவர் அறிவிக்கப்பட்டுள்ளதால், மகளிர் பிரீமியர் லீக்கின் இறுதிக்கட்ட போட்டிகளில் அவர் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டன் அலீஸா ஹீலி காயம் காரணமாக இந்த சீசனில் விளையாடவில்லை. இந்த நிலையில், இறுதிக்கட்ட போட்டிகளில் சமாரி அத்தப்பத்து அணியில் இடம்பெறமாட்டார் என்பது யுபி வாரியர்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் களமிறங்கும் இந்திய அணி; ஷிகர் தவான் கூறுவதென்ன?

பிப்ரவரி 26 ஆம் தேதி வரையிலான போட்டிகளில் சமாரி அத்தப்பத்து விளையாடுவார் எனக் கூறப்படுகிறது. பிப்ரவரி 26 ஆம் தேதிக்கு முன்பாக யுபி வாரியர்ஸ் நான்கு போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்த ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இடம்பெற்று விளையாடும் ஒரே ஒரு நியூசிலாந்து வீராங்கனையான அமெலியா கெர், இந்த தொடர் முழுவதும் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன்ஸ் டிராபி: ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

சாம்பியன்ஸ் டிராபியில் ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கராச்சியில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ... மேலும் பார்க்க

எல்லீஸ் பெர்ரி விளாசல்: மும்பை அணிக்கு 168 ரன்கள் இலக்கு!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. 3-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் முதல் கட்ட ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூ... மேலும் பார்க்க

அணியில் பிரதான பந்துவீச்சாளர்கள் இல்லை, ஆனால்... ஸ்டீவ் ஸ்மித் கூறுவதென்ன?

ஆஸ்திரேலிய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவுள்ளது குறித்து அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இல்லை: பாக். முன்னாள் வீரர்

பாகிஸ்தானைக் காட்டிலும் இந்திய அணியில் அதிக அளவிலான போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துப... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கான அழுத்தத்தில் இருக்கிறோமா? பாக். வீரர் பதில்!

மற்ற அணிகளுக்கு எதிரான போட்டியைப் போன்றே இந்தியாவுக்கு எதிரான போட்டியையும் பார்ப்பதாக பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் தெரிவித்துள்ளார்.வழக்கமாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்க... மேலும் பார்க்க

மனைவியைப் பிரிந்தார் சஹால்..! ரூ.60 கோடி ஜீவனாம்சம் கேட்டாரா தனஸ்ரீ வர்மா?

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா இருவரும் பரஸ்பர முறையில் விவகாரத்து பெற்று பிரிவதாக முடிவெடுத்துள்ளனர். இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர... மேலும் பார்க்க