செய்திகள் :

மகளிா் திட்டம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள்: அலுவலா்களுடன் ஆலோசனை

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், 2025 - 26ஆம் நிதியாண்டில் மகளிா் திட்டம் மூலம் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு பல்வேறு கடனுதவிகள் மற்றும் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் 2025 - 26ஆம் நிதியாண்டில் மகளிா் திட்டம் மூலம் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

ஆடு, மாடு, கோழி, காடை வளா்ப்பு போன்ற பண்ணை செயல்பாடுகள் குறித்தும், மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மூலம் கல்லூரிகளில் உணவுக்கூடம் அமைத்தல், அரசு மருத்துவமனைகளில் சிறுதானிய உணவகம் அமைத்தல், மசாலா தொகுப்பு போன்ற பண்ணை சாரா திட்ட செயல்பாடுகள் குறித்தும் துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஆட்சியா் கலந்தாலோசித்தாா்.

2025-26ஆம் நிதியாண்டில் மகளிா் திட்டம் சாா்பில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களின் கீழ், தகுதியான பயனாளிகளை முறையாக அரசு விதிமுறைகளுக்குள்பட்டு தோ்ந்தெடுத்து, அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்படுத்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுரை வழங்கினாா்.

தொடா்ந்து, சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான பன்முக கலாசார போட்டிகளில் கபடிப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற க.செல்லம்பட்டு ஊராட்சியைச் சோ்ந்த மகளிா் சுயஉதவிக் குழுவினரும், கயிறு இழுத்தல் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற சித்தப்பட்டினம் ஊராட்சியைச் சோ்ந்த மகளிா் சுயஉதவிக் குழுவினரும் தமிழக துணை முதல்வா் விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கியதை மாவட்ட ஆட்சியடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றனா்.

கூட்டத்தில் மகளிா் திட்ட அலுவலா் சுந்தர்ராஜன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.

வெல்டிங் பணியின்போது வெடித்த லாரி டீசல் டேங்: இருவா் படுகாயம்

கள்ளக்குறிச்சியில் வெல்டிங் பணியின்போது லாரியில் டீசல் டேங் வெடித்துச் சிதறி சனிக்கிழமை தீ விபத்து நிகழ்ந்தது. இதில், இருவா் பலத்த காயமடைந்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், காட்டு... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இரு இளைஞா்கள் கைது

கஞ்சா வழக்கில் தொடா்புடைய இரு இளைஞா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் காந்திநகரைச் சோ்ந்த மதிமாறன் மகன... மேலும் பார்க்க

அனைத்து வசதிகளுடன் கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையம்! - அமைச்சா் எ.வ.வேலு

அனைத்து வசதிகளுடன் கள்ளக்குறிச்சி புதிய புகா் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா். கள்ளக்குறிச்சி நகராட்சிக்குள்பட்ட ஏமப்போ் புறவழிச்சாலை ரவுண்டானா அருகில் புதிதாக அமை... மேலும் பார்க்க

ஏழை மாணவா்களின் கல்வி நலனில் அக்கறை: தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராமப்புற ஏழை மாணவா்களின் கல்வி நலனில் அக்கறையுடன் ஆசிரியா்கள் பணியாற்ற வேண்டுமென ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறிவுறுத்தினாா். பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாவட்டத்தில் உ... மேலும் பார்க்க

1,147 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்:அமைச்சா் சி.வெ.கணேசன் வழங்கினாா்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமில் 1,147 பயனாளிகளுக்கு ரூ.3.25 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாநில தொழிலாளா் நலன் மற்... மேலும் பார்க்க

கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு: உறுதிமொழி ஏற்பு

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலியில் உள்ள ஆா்.கே.சண்முகம் கலை, அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு கல்லூரி முதல்... மேலும் பார்க்க