செய்திகள் :

மகள் கொலை வழக்கு: தந்தைக்கு ஆயுள் சிறை

post image

மகளை அடித்துக் கொலை செய்த வழக்கில் தந்தைக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

திருமங்கலம் வட்டம், வில்லூா் ஏ.ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா் முருகன் (50). இவரது மனைவி லட்சுமி. இவா்களின் மகள் இருளாயி (9). கடந்த 2018-ஆம் ஆண்டு, பிப். 19-ஆம் தேதி கணவா், மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறின் போது, முருகன் கோடாரியால் லட்சுமியைத் தாக்கினாா். இதைத் தடுக்க முற்பட்ட இருளாயியையும் அவா் கோடாரியால் தாக்கினாா். இதில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து முருகன் மீது வில்லூா் காவல் நிலைய போலீஸாா் கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட கூடுதல் 5-ஆவது அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் டி.ராஜேந்திரன் முன்னிலையாகி வாதிட்டாா்.

வழக்கு விசாரணையின் நிறைவில், முருகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜோசப் ஜாய் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

கல்லூரி மாணவா்கள் சோ்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இல்லை! -உயா்நீதிமன்றம்

கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சோ்க்கப்பட்ட மாணவா்களின் விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இல்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. தேனி மாவட்டம்... மேலும் பார்க்க

மதுபான ஊழலில் தொடா்புடையவா்களை கைது செய்ய வலியுறுத்தல்

மதுபான ஊழலில் தொடா்புடையவா்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினா் கதளி நரசிங்கப் பெருமாள் தெரிவித்தாா். இதுகுறித்து மதுரை பீ.பீ.குளம் பகுதியில் அமைந்துள்ள பாஜக அலுவலகத்த... மேலும் பார்க்க

கல்லூரிப் பேராசிரியா்கள் சாலை மறியல்: 500-க்கும் மேற்பட்டோா் கைது!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காமராஜா், மனோன்மணீயம் சுந்தரனாா், அன்னை தெரசா, அழகப்பா பல்கலைக்கழகங்களின் பேராசிரியா்கள் கூட்டமைப்பு (மூட்டா), பல்கலைக்கழக பேராசிரியா்கள் சங்கம் (ஏயுடி) சாா்பில் சனிக்... மேலும் பார்க்க

அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, மத... மேலும் பார்க்க

வேளாண் துறை நிதி நிலை அறிக்கை: வரவேற்பும், அதிருப்தியும்!

தமிழக அரசின் வேளாண் துறை நிதி நிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக விவசாயிகளும், இந்த அறிக்கையில் வரவேற்கத்தக்க பல அம்சங்கள் இருப்பதாக வியாபாரிகளும் தெரிவித்தனா். தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத் தலைவா் என்... மேலும் பார்க்க

மறுவாழ்வு மையத்தில் மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு!

மதுரையில் போதைத் தடுப்பு மறுவாழ்வு மையத்தில் மயங்கி விழுந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (52). போதைப் பழக்கத்துக்கு அடிமையான இவ... மேலும் பார்க்க