செய்திகள் :

மகாராஷ்டிரத்தில் 3,367 ஒலிபெருக்கிகள் அகற்றம்: முதல்வர் ஃபட்னவீஸ்! ஏன்?

post image

மகாராஷ்டிரத்தில் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த 3,300-க்கும் அதிகமாக ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளதாக, அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் ஒலி மாசுப்பாடுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக, அங்குள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 3,367 ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளதாக, முதல்வர் ஃபட்னவீஸ் இன்று (ஜூலை 11) சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இதில், மும்பை நகரத்தில் மட்டும் 1,608 ஒலிப்பெருக்கிகளை காவல் துறையினர் அகற்றியுள்ளதாகவும்; இதனால், மும்பையின் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் ஒலிப்பெருக்கிகள் இல்லாததாக மாறிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, உள்ளூர் காவல் துறையினர் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் மீண்டும் ஒலிப்பெருக்கிகள் பொருத்தப்படுவதைத் தவிர்க்க அவ்வப்போது சோதனைகளில் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், யூர் வனப்பகுதிக்கு அருகில் அதிகரித்து வரும் அதிகப்படியான சத்தங்களினால், வனவிலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறிப்பிட்டு, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜிதேந்திர அவாத் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

அதற்கு பதிலளித்த முதல்வர் ஃபட்னவீஸ், வனப்பகுதிகளுக்கு அருகில் இசை வாத்தியங்கள் மற்றும் ஒலிப்பெருக்கிகள் உறுதியாக அனுமதிக்கப்படாது என்றும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வனத் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.

Maharashtra Chief Minister Devendra Fadnavis has announced that more than 3,300 loudspeakers installed near places of worship have been removed.

இதையும் படிக்க: கேரளத்துக்கு அமித் ஷா வருகை! 3 நாள்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை!

கொல்கத்தாவில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்! மீண்டும் ஒரு சம்பவம்!

கொல்கத்தாவில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்கம் மாநிலத்தில் கொல்கத்தாவில் உள்ள இந்திய தொழில்நுட்ப மேலாண்மை வணிகக் கல்லூரியின் விட... மேலும் பார்க்க

தாணேவில் ரயிலில் சென்ற பெண்ணுக்கு பிரசவ வலி: அபாய சங்கிலியை இழுத்த சக பயணிகள்!

தாணேவில் உள்ளூர் ரயிலில் சென்ற பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் சக பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தில் நிறைமாத கர்ப்பிணி ஹினா தனது கணவருடன் ... மேலும் பார்க்க

ஷங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீனா செல்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப்... மேலும் பார்க்க

ஹிமாசல் பருவமழைக்கு இதுவரை 92 பேர் பலி: ரூ.751.78 கோடி இழப்பு!

ஹிமாச்சலப் பிரதேசம் முழுவதும் கனமழை மற்றும் மேக வெடிப்புகளால் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் இந்தாண்டு பருவமழை ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், ... மேலும் பார்க்க

மகளைப் பற்றி தவறான பேச்சுகள்.. டென்னிஸ் வீராங்கனை ராதிகா கொலையில் வெளியான தகவல்!

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் பற்றி பலரும் தவறாகப் பேசியதால் மனம் வேதனையடைந்து அவமானத்தால், மகளை சுட்டுக் கொன்றதாக, கைது செய்யப்பட்ட தந்தை தீபக் யாதவ் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஹர... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!

பொது மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தில்லியில் 51 ஆயிரம் இளைஞக்ளுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நிய... மேலும் பார்க்க