அஜித்குமார் மரணம்: "போலீஸ் தாக்குதல்தான் காரணம் என அறிந்து வேதனையடைந்தேன்; CBI வ...
மகாராஷ்டிரா: "உழவு மாடு வாங்க பணமில்லை..." - மனைவியின் துணையோடு கலப்பையால் தானே உழுத விவசாயி
நாட்டிலேயே வளர்ச்சியடைந்த மாநிலமாகக் கருதப்படும் மகாராஷ்டிராவில்தான் அதிகப்படியான விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர்.
தற்கொலையைத் தடுக்க மாநில அரசு பல முறை விவசாய கடனைத் தள்ளுபடி செய்திருக்கிறது. அப்படி இருந்தும் தற்கொலை சம்பவங்கள் குறையவில்லை.
மகாராஷ்டிராவின் லாத்தூர் மாவட்டத்தில் உள்ள ஹடோல்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பாதாஸ் பவார்(73). இவருக்குச் சொந்தமாக 2.3 ஏக்கர் நிலம் இருக்கிறது.
வயதான காலத்திலும் மனம் தளராமல் தனது மனைவியின் துணையோடு அந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். அவரது மகன் புனேயில் வேலை செய்து வருகிறார். மருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் அம்பாதாஸுடன் வசித்து வருகின்றனர்.
அவர்களது படிப்பு செலவை அம்பாதாஸ்தான் கவனித்துக்கொள்கிறார். விவசாயத்தில் போதிய வருமானம் வராத காரணத்தால் வெளியில் கடன் வாங்கி படிப்புக்குச் செலவு செய்து வருகிறார்.

பருத்தி பயிரிட்டு இருந்தார். அதனை அறுவடை செய்யக்கூடப் பணம் இல்லை. இதனால் தனது மனைவி முக்தாபாய் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் துணையோடு பருத்தியை அறுவடை செய்தார்.
அடுத்தகட்டமாக நிலத்தில் பயிரிட நிலத்தைத் தயார்ப்படுத்த உழவடிக்கத் தேவையான காளை மாடுகள் வாங்கவும் பணம் இல்லை. காளை மாடுகளை வாடகைக்கு எடுப்பதாக இருந்தால் அதற்குத் தினமும் ரூ 2.500 கொடுக்க வேண்டும். அதற்கும் பணமில்லை.
இதனால் வேறு வழியில்லாமல் நிலத்தில் உழவு உழுவதற்கு மாடுகள் இல்லாமல் வெறும் கலப்பையை எடுத்துக்கொண்டு தனது மனைவியை அழைத்துக்கொண்டு அம்பாதாஸ் தோட்டத்திற்குச் சென்றார்.
அங்குத் தனது மனைவியிடம் கலப்பையைப் பிடித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். அம்பாதாஸ் கலப்பையைத் தானே பிடித்து இழுத்து உழவு உழ ஆரம்பித்தார்.
வயதான காலத்தில் அம்பாதாஸ் உழவு உழுத காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி இருக்கிறது. அம்பாதாஸ் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.40 ஆயிரம் கடன் வாங்கி இருக்கிறார்.
அரசு கடனைத் தள்ளுபடி செய்யும் என்ற எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறார். தேர்தல் நேரத்தில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனால் இது வரை தள்ளுபடி செய்யப்படவில்லை.