செய்திகள் :

மகாராஷ்டிரா: ஏழை எனக்கூறி அரசிடம் வீடு வாங்கிய அமைச்சருக்கு 2 ஆண்டு சிறை; பதவிக்கு ஆபத்து..

post image

மகாராஷ்டிராவில் வேளாண்துறை அமைச்சராக இருக்கும் மாணிக்ராவ் கோகடேவுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரா அரசு வீடுகளை கட்டி, ஏழைகள் மற்றும் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்து வருகிறது. இந்த வீடுகளை பெற ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு எவ்வளவு வருமானம் இருக்கவேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது.

1989-94ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மாணிக்ராவ் கோகடேவும், அவரது சகோதரர் விஜயும் சேர்ந்து தாங்கள் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்கள் என்று கூறி அரசாங்கத்திடமிருந்து மலிவு விலை வீடுகளை வாங்கினர். அவர்கள் தங்களது ஆண்டு வருமானம் 30 ஆயிரம் என்று குறிப்பிட்டு இருந்தனர். இதற்காக அவர்கள் போலி ஆவணங்களை தாக்கல் செய்தனர்.

உண்மையில் அவர்கள் இருவரும் அப்போது கூட்டுறவு தொழிற்சாலை ஒன்றில் உறுப்பினர்களாகவும், 25 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களாகவும் இருந்தனர். அவர்கள் இரண்டு பேரும் போலி ஆவணங்களை தாக்கல் செய்து அரசாங்கத்தை ஏமாற்றி மலிவு விலை வீட்டை வாங்கியதாக கூறி புகார் செய்யப்பட்டதை தொடர்ந்து 1995ம் ஆண்டு இருவர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு விசாரணை கடந்த 30 ஆண்டுகளாக நாசிக் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இவ்வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி ரூபாலி, குற்றம் சாட்டப்பட்ட சகோதரர்கள் இரண்டு பேருக்கும் அரசாங்கத்தை ஏமாற்றி வீடு வாங்கியதற்காக 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

தீர்ப்பு

இரண்டு பேரும் ஏழைகள் இல்லை என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டு இருப்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். இரண்டு பேரும் ஏழைகளுக்கு கிடைக்கவேண்டிய சொத்தை ஏழைகளிடமிருந்து பறித்து இருப்பதாக நீதிபதி தெரிவித்தார். அதோடு இருவருக்கும் ஒதுக்கப்பட்ட வீட்டை ரத்து செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். இரண்டு பேரும் மேல் முறையீடு செய்ய ஏதுவாக இருவருக்கும் கோர்ட் ஜாமீன் வழங்கியது. மாணிக்ராவ் தற்போது அமைச்சராக இருக்கிறார். அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதால் சட்டப்படி அவரது எம்.எல்.ஏ.பதவி பறிபோகும்.

இதற்கு முந்தைய காலக்கட்டங்களில் கோர்ட் தீர்ப்பு வந்தவுடன் எம்.எல்.ஏ., எம்.பி பதவி பறிக்கப்பட்டு இருக்கிறது. கோர்ட் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் மாணிக்ராவ் ,30 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் உள்நோக்கத்தோடு இவ்வழக்கு தொடரப்பட்டது. தீர்ப்பை முழுமையாக படிக்கவில்லை. அதை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம்'' என்று தெரிவித்தார்.

அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு: ஞானசேகரன் மீது 7 திருட்டு வழக்குகள்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் தி.மு.க ஆதரவாளர் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியானதற்குச் சென்னை உயர் நீதிமன்றம் கண்... மேலும் பார்க்க

கும்பகோணம்: பகலில் கொத்தனார், இரவில் திருடர்... கெட் அப் சேஞ்ச் திருடர் சிக்கியது எப்படி?

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், டாக்டர் மூா்த்தி சாலையைச் சேர்ந்தவர் சார்லஸ் (63). இவர் கடந்த ஜனவரி 8ம் தேதி, தனது மகனைச் சென்னைக்கு பஸ் ஏற்றி விடுவதற்காகக் கும்பகோணம் பஸ் ஸ்டாண்டுக்கு குடும்பத்துடன் ... மேலும் பார்க்க

ராஜபாளையம்: மாட்டுக்குப் புல் அறுக்கச் சென்ற மூதாட்டி; காட்டெருமையால் நேர்ந்த சோகம்; என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தரநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி. இவரின் மனைவி சுந்தராம்பாள். இவர்களுக்கு நான்கு ஆண், ஒரு பெண் என மொத்தம் ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இவர்க... மேலும் பார்க்க

மதுரை: கலெக்டர், காவல்துறையினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோயிலில் திருட்டு; போலீஸ் தீவிர விசாரணை

கலெக்டர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் முகாம் அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியிலுள்ள கோயிலில் உண்டியல் பணம் திருடப்பட்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.போலீஸ் விசாரணைமதுரை ரேஸ்கோர்ஸ... மேலும் பார்க்க

`கோவை MyV3Ads நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவரா நீங்கள்?'- காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாக கொண்டு MyV3Ads என்ற நிறுவனம் இயங்கி வந்தது. செல்போனில் விளம்பரம் பார்த்தால் பணம் சம்பாதிக்கலாம் என்று நூதன விளம்பரம் செய்தது. இதற்காக பல்வேறு பிரிவுகளில் திட்டங்களை அறிமு... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: சுற்றுலா வந்த காதல் ஜோடி; ரெளடி கும்பலின் வன்கொடுமை கொடூரம் - சுட்டுப்பிடித்த போலீஸ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிரபலமான மலைக்கோயிலுக்கு திருப்பத்தூரை சேர்ந்த காதல் ஜோடி கடந்த 19.02.2025 ஆம் தேதி சுற்றுலா வந்துள்ளது. அப்போது, மலையின் மேலே உள்ள தர்காவுக்கு செல்ல முயன்றபோது, அங்கு மற... மேலும் பார்க்க