செய்திகள் :

மகாராஷ்டிரா: "தயாராகாத சாலைக்குக் கட்டணம்" - சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய ராஜ்தாக்கரே கட்சி

post image

மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி சமீப காலமாகத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. மராத்தி பிரச்னையில் வெளிமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அடுத்த சில மாதங்களில் மாநகராட்சிக்குத் தேர்தல் வர இருக்கிறது. ஏற்கனவே மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து படுதோல்வியைச் சந்தித்து வரும் ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா 20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுடன் கூட்டணி வைப்பதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், அகோலா மற்றும் நாண்டெட் நெடுஞ்சாலையில் வாசிம் மாவட்டத்தில் உள்ள தொண்ட்காவ் டோல்கேட்டை நவநிர்மாண் சேனாவினர் அடித்து உடைத்தனர். இரும்பு கம்பிகளைக் கொண்டு அடித்து உதைத்தனர்.

டோல்கேட் மீது தாக்குதல்
டோல்கேட் மீது தாக்குதல்

இரண்டு பேர் டோல்கேட் கண்ணாடியை இரும்பு கம்பியால் அடிக்கும் வீடியோ சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி இருக்கிறது.

இது குறித்து நவநிர்மாண் சேனா மாவட்டத் தலைவர் ராஜு பாட்டீல் கூறுகையில், ''சாலை இன்னும் முழுமையாகப் பயன்பாட்டிற்குத் தயாராகவில்லை. ஆனால் டோல்கேட் செயல்படத் தொடங்கிவிட்டது. எந்த வசதியும் செய்து கொடுக்கவில்லை.

இதற்காகப் பல முறை மனுக்கொடுத்திருக்கிறோம். அருகில் உள்ள கிராமத்திற்குச் சாலை கூட இன்னும் போட்டு முடியவில்லை. ஆனால் அதற்குள் நுழைவு வரி வசூலிக்க ஆரம்பித்துவிட்டனர்.

அவர்கள் வருமானத்திற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். உள்ளூர் மக்கள் கோபத்தில் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கின்றனர்'' என்று குறிப்பிட்டார்.

இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட நவநிர்மாண் சேனாவினரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கடந்த வாரம், 'நான் ஏன் மராத்தி கற்றுக்கொள்ளவேண்டும்' என்று தொழிலதிபர் சுஷில் கேடியா கேள்வி எழுப்பி இருந்தார். இதையடுத்து மும்பை ஒர்லியில் உள்ள சுஷில் அலுவலகத்தை நவநிர்மாண் சேனாவினர் அடித்து உடைத்தனர். இதற்கு முன்பும் பல முறை நவநிர்மாண் சேனாவினர் டோல்கேட்டை அடித்துச் சேதப்படுத்தி இருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

மனிதர்களின் இறுதி தருணங்களை நிறைவாக மாற்றும் செவிலியர்... என்ன செய்கிறார் தெரியுமா?

”ஒரு மனிதன் நோயாளியாக இறப்பதற்கு முன், அவருக்கு மருந்துகள் மட்டும் போதாது.. நேசம், நம்பிக்கை, கருணை போன்ற மனித உணர்வுகளும் அவசியம்” என்று கூறுகிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த செவிலியர் பெலிண்டா மார்க்ஸ் எ... மேலும் பார்க்க

"நாம் உலகின் குழந்தைகள்" - குடும்பப் பின்னணியை அறிய DNA பரிசோதனை; பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி

பிரான்ஸில் பிறந்து, போர்த்துகீசிய பெற்றோரால் வளர்க்கப்பட்ட கேட் என்ற பெண், சிறிய வயதிலிருந்தே தன்னைக் குடும்பத்தில் ஒரு வித்தியாசமானவராக உணர்ந்திருக்கிறார்.@juust_kate என TikTok-இல் அழைக்கப்படும் கேட்... மேலும் பார்க்க

பீகார்: நாகப்பாம்பைப் பிடிக்க முயன்ற பாம்பு பிடி வீரர் பலியான சோகம்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

பீகார் மாநிலத்தில் பிரபல பாம்பு பிடி வீரர் ஒருவர் பாம்பு கடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். பீகார் மாநிலத்தின் வைசாலி மாவட்டத்தில் பிரபல பாம்பு பிடி வீரராக இருப்பவர் ஜே.பி.யாதவ். பல வரு... மேலும் பார்க்க

தொடர் பாலின துன்புறுத்தல்; தாலிபன் தலைவர்களுக்கு கைது வாரண்ட்; சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

ஆப்கானிஸ்தான் நாட்டின் பெண்கள் மற்றும் சிறுமிகளை தாலிபன்கள் துன்புறுத்துவதை எதிர்த்து நடவடிக்கை எடுத்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி), தாலிபன்களின் தலைவரான ஹிபதுல்லா அகுந்த்சாடா மற்றும் ஆப்... மேலும் பார்க்க

சீனா: அலுவலகமாக மாற்றிய நீச்சல் குளம்; தீயணைப்புத் துறையால் பின்வாங்கிய நிறுவனம்; பின்னணி என்ன?

சீனாவின் ஒரு அலங்கார நிறுவனமான லூபான் டெகோரேஷன் குழுமம் (Luban Decoration Group), தனது அலுவலகத்தை நீச்சல் குளத்தில் மாற்றியதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.ஏற்கனவே இருந்த அலுவலகத்தைப் பு... மேலும் பார்க்க

மராத்தி விவகாரம்: `என்னிடம் கேட்காமல் பேசக்கூடாது’ - நிர்வாகிகளுக்கு ராஜ் தாக்கரே வாய்ப்பூட்டு

மகாராஷ்டிராவில் வாழும் வெளிமாநிலத்தவர்கள் கட்டாயம் மராத்தி பேசவேண்டும் என்று ராஜ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார். மராத்தி பேசாத கடைக்காரர்களை ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தொண்டர்கள் அ... மேலும் பார்க்க