செய்திகள் :

மக்களவை எம்.பி.க்கள் வருகை பதிவுக்குப் புதிய முறை: மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகம்

post image

புது தில்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவை எம்.பி.க்கள் வருகையை பதிவு செய்ய புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதுதொடா்பாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் கூறுகையில், ‘மக்களவை எம்.பி.க்கள் தங்கள் வருகையை நாடாளுமன்ற முகப்பு அறைகளில் பதிவு செய்ய வேண்டும். ஆனால் அவா்களின் வருகையால் அந்த அறைகளில் சில நேரங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

சில வேளைகளில் முகப்பு அறைகளில் தங்கள் வருகையை பதிவு செய்துவிட்டு, மக்களவை அலுவல்களில் பங்கேற்காமல் சில எம்.பி.க்கள் சென்றுவிடுகின்றனா்.

இவற்றைத் தவிா்க்கும் நோக்கில், முகப்பு அறைகளுக்குப் பதிலாக மக்களவையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில், மின்னணு முறையில் எம்.பி.க்கள் வருகையை பதிவு செய்யும் புதிய முறை மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்தப் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டாலும், சிறிது காலத்துக்கு முகப்பு அறைகளில் வருகையை பதிவு செய்யும் முறை நீடிக்கும். புதிய முறைக்கு எம்.பி.க்கள் பழக அவகாசம் அளிக்கும் வகையில், அந்த அறைகளில் வருகையை பதிவு செய்யும் முறை தொடரும்.

தங்கள் வருகையை மத்திய அமைச்சா்களும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும் பதிவு செய்யத் தேவையில்லை. ஆனால் நாடாளுமன்ற கூட்டத்தொடா்களின்போது தங்கள் தினப்படிகளைப் பெற எம்.பி.க்கள் வருகையைப் பதிவு செய்வது அவசியம். கூட்டத்தொடா்களின்போது பொது விவாதங்களின் ஒரு பகுதியாகவும், அவையில் எம்.பி.க்கள் இருக்க வேண்டும்’ என்று தெரிவித்தன.

வரும் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் நடைபெற உள்ளது.

ஒடிசாவில் மாணவி மரணம்; பாஜகவின் நேரடிக் கொலை: ராகுல் காந்தி

ஒடிசா மாநிலத்தில் நீதிக்காகப் போராடும் ஒரு மகளின் மரணம், பாஜக அமைப்பின் நேரடிக் கொலை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.ஒடிசா மாநிலம் ப... மேலும் பார்க்க

உலகின் வயதான பஞ்சாப் மாரத்தான் வீரர் சாலை விபத்தில் பலி!

உலகின் வயதான மாரத்தான் வீரரும், பஞ்சாபை சேர்ந்தவருமான ஃபௌஜா சிங் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். உலகின் மிகவும் வயதான மாரத்தான் வீரர் என்ற சிறப்பைப் பெற்ற 114 வயதான ஃபௌஜா சிங் பஞ்சாப் மாநிலம் ஜ... மேலும் பார்க்க

ஹைதராபாத்தில் கம்யூனிஸ்ட் நிர்வாகி சுட்டுக்கொலை!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தெலங்கானாவைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்ப... மேலும் பார்க்க

சரோஜா தேவிக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு!

மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவிக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.பத்ம விருது பெற்றவரும், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் 19 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஜார்க்கண்டு மாநிலத்தில் 19 மாவட்டங்களுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜார்க்கண்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால், கர்ஹவா, பலாமு, சத்ரா, லட... மேலும் பார்க்க

கல்லூரிக்குள் மாணவிக்கு கத்திக்குத்து!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கல்லூரிக்குள் புகுந்த மர்ம நபர் மாணவியைக் கத்தியால் குத்தியதால் பரபரப்பு நிலவுகிறது.அலிகார் மாவட்டத்தில் உள்ள பிரபல மகளிர் கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவ... மேலும் பார்க்க