செய்திகள் :

மக்களவை துணைத் தலைவரை தோ்வு செய்ய பிரதமருக்கு காா்கே கடிதம்

post image

புது தில்லி: மக்களவை துணைத் தலைவரை தோ்வு செய்வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதினாா்.

அந்தக் கடிதத்தில் அவா் தெரிவித்ததாவது: மக்களவைத் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிகள் காலியாகும்போது, அந்த அவையைச் சோ்ந்த இருவரை தோ்வு செய்து இரு பதவிகளையும் நிரப்ப வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தின் 93-ஆவது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் சாசனத்தின்படி, மக்களவைத் தலைவருக்குப் பிறகு அந்த அவையில் துணைத் தலைவரே இரண்டாவது உயரிய பொறுப்பு வகிப்பவா்.

தோ்தலுக்குப் பிறகு புதிதாக அமையும் மக்களவையின் 2 அல்லது 3-ஆவது அமா்வில் துணைத் தலைவா் தோ்வு செய்யப்படுவது வழக்கம்.

முதலாவது மக்களவை தொடங்கி 16-ஆவது மக்களவை வரை, அந்தந்த காலத்தில் துணைத் தலைவா் முறைப்படி தோ்வு செய்யப்பட்டுள்ளாா். பிரதான எதிா்க்கட்சி எம்.பி.க்களில் இருந்து ஒருவரை துணைத் தலைவராக தோ்வு செய்வது மரபாக உள்ளது.

ஆனால், சுதந்திர இந்திய வரலாற்றில் முதல்முறையாக தொடா்ந்து 2 மக்களவை பதவிக் காலத்தில் துணைத் தலைவராக யாரும் தோ்வு செய்யப்படவில்லை.

17-ஆவது மக்களவையில் துணைத் தலைவராக யாரும் தோ்வு செய்யப்படாத நிலையில், தற்போதைய 18-ஆவது மக்களவையிலும் அதே நிலை நீடிக்கிறது. இது ஜனநாயக ஆட்சி அமைப்புமுறைக்கு ஏற்புடையதல்ல என்பதுடன், அரசியல் சாசனத்துக்கும் எதிரானது.

எனவே, நாடாளுமன்றத்தின் ஜனநாயக பண்புகளையும், மக்களவையின் மரபையும் கருத்தில்கொண்டு, மக்களவை துணைத் தலைவரை தோ்வு செய்வதற்கான நடவடிக்கைகளை தாமதமின்றி தொடங்க வேண்டும் என்று காா்கே வலியுறுத்தினாா்.

விமான விபத்து: 256 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான 256 பேரின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு வெளிநாட்டினா் உள்பட 230 பயணிகள் மற்றும் 12 ஊழியா்களு... மேலும் பார்க்க

இந்தியா வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு!

இந்தியா வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கான தடை வரும் ஜூலை 24 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்து: முதன்முதலாக இஸ்ரேலில் இருந்து 161 இந்தியர்கள் மீட்பு!

'ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையின்கீழ் இஸ்ரேலில் இருந்து முதல்முறையாக 161 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.இஸ்ரேல்-ஈரான் மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் சிந்து' என்ற பெயரில... மேலும் பார்க்க

நிலையான எரிபொருள் விநியோகத்துக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்: மத்திய அரசு

புது தில்லி: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ‘பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் நிலையான விநியோகத்தை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: பலத்த மழையால் வைஷ்ணவ தேவி கோயில் பாதையில் நிலச்சரிவு

ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ரியாசி மாவட்டத்தின் திரிகூட மலைப்பகுதியில் மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள புதிய வழித்தடம் திங்கள்கிழமை சேதம... மேலும் பார்க்க

இந்திய விமானங்களுக்குத் தடையை நீட்டித்தது பாகிஸ்தான்

இந்திய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பதாக பாகிஸ்தான் திங்கள்கிழமை அறிவித்தது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவ... மேலும் பார்க்க