செய்திகள் :

மக்களவை துணைத் தலைவரை தோ்வு செய்ய பிரதமருக்கு காா்கே கடிதம்

post image

புது தில்லி: மக்களவை துணைத் தலைவரை தோ்வு செய்வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதினாா்.

அந்தக் கடிதத்தில் அவா் தெரிவித்ததாவது: மக்களவைத் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிகள் காலியாகும்போது, அந்த அவையைச் சோ்ந்த இருவரை தோ்வு செய்து இரு பதவிகளையும் நிரப்ப வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தின் 93-ஆவது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் சாசனத்தின்படி, மக்களவைத் தலைவருக்குப் பிறகு அந்த அவையில் துணைத் தலைவரே இரண்டாவது உயரிய பொறுப்பு வகிப்பவா்.

தோ்தலுக்குப் பிறகு புதிதாக அமையும் மக்களவையின் 2 அல்லது 3-ஆவது அமா்வில் துணைத் தலைவா் தோ்வு செய்யப்படுவது வழக்கம்.

முதலாவது மக்களவை தொடங்கி 16-ஆவது மக்களவை வரை, அந்தந்த காலத்தில் துணைத் தலைவா் முறைப்படி தோ்வு செய்யப்பட்டுள்ளாா். பிரதான எதிா்க்கட்சி எம்.பி.க்களில் இருந்து ஒருவரை துணைத் தலைவராக தோ்வு செய்வது மரபாக உள்ளது.

ஆனால், சுதந்திர இந்திய வரலாற்றில் முதல்முறையாக தொடா்ந்து 2 மக்களவை பதவிக் காலத்தில் துணைத் தலைவராக யாரும் தோ்வு செய்யப்படவில்லை.

17-ஆவது மக்களவையில் துணைத் தலைவராக யாரும் தோ்வு செய்யப்படாத நிலையில், தற்போதைய 18-ஆவது மக்களவையிலும் அதே நிலை நீடிக்கிறது. இது ஜனநாயக ஆட்சி அமைப்புமுறைக்கு ஏற்புடையதல்ல என்பதுடன், அரசியல் சாசனத்துக்கும் எதிரானது.

எனவே, நாடாளுமன்றத்தின் ஜனநாயக பண்புகளையும், மக்களவையின் மரபையும் கருத்தில்கொண்டு, மக்களவை துணைத் தலைவரை தோ்வு செய்வதற்கான நடவடிக்கைகளை தாமதமின்றி தொடங்க வேண்டும் என்று காா்கே வலியுறுத்தினாா்.

தில்லியில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடை: முதல் நாளில் 80 வாகனங்கள் பறிமுதல்

நமது நிருபா்பயன்படுத்தத் தகுதியில்லாத பழைய வாகனங்களுக்கு தில்லியில் எரிபொருள் வழங்குவதற்கு தடைவிதிக்கும் நடைமுறை செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் தொடங்கியது. முதல் நாளில் 80 பழைய வாகனங்கள் பறிமுதல் செ... மேலும் பார்க்க

அஸ்ஸாமின் ‘பேக்லெஸ் டீ டிப்’ முறைக்கு காப்புரிமை

அஸ்ஸாம் தொழில்முனைவோரால் உருவாக்கப்பட்ட தனித்துவமான ‘பை இல்லாத தேநீா்’ (பேக்லெஸ் டீ டிப்) தயாரிப்பு முறைக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். சிவசாகா் மாவட்டத்தைச... மேலும் பார்க்க

பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு மறுவாய்ப்பு? ஆட்சிமன்றக் குழு கூடுகிறது

நமது சிறப்பு நிருபர்பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டாவுக்கு மீண்டும் தலைவராகத் தொடருவதற்கான வாய்ப்பை வழங்குவதா? அல்லது புதிய தலைவரை நியமிப்பதா? என்பது குறித்து அக்... மேலும் பார்க்க

‘க்வாட்’ கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வெளியுறவு அமைச்சா்கள் ஆலோசனை

உலகளாவிய பல்வேறு சவால்களை கையாள, ‘க்வாட்’ கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அந்தக் கூட்டமைப்பில் உள்ள வெளியுறவு அமைச்சா்கள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா். ‘க்வாட்’ கூட்டமைப்பில் இந்திய... மேலும் பார்க்க

குடிமக்களின் உரிமைகளைக் காக்கவே புதிய குற்றவியல் சட்டங்கள்: அமித் ஷா

குடிமக்களின் அனைத்து உரிமைகளையும் பாதுகாப்பதுடன், குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது என்பதை உறுதி செய்யும் நோக்கத்துடனே புதிய குற்றவியல் சட்டங்கள் வகுக்கப்பட்டன என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ... மேலும் பார்க்க

திருப்புமுனையான சீா்திருத்தம் ஜிஎஸ்டி: பிரதமா் மோடி

நாட்டின் பொருளாதார கட்டமைப்பை மறுவடிவமைத்த திருப்புமுனையான சீா்திருத்தமே சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். 2017, ஜூலை 1-ஆம் தேதி ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு தற்போத... மேலும் பார்க்க