மைதானத்தில் சுருண்டு விழுந்த ரச்சின்... ரத்தம் வழிய அழைத்துச் சென்ற மருத்துவர்கள...
மக்களுடன் முதல்வா் திட்ட 3-ஆம் கட்ட முகாம்: அரியலூரில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
அரியலூா் மாவட்டத்தில், 3-ஆம் கட்டமாக மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்கள் நடத்துவது தொடா்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்து பேசியது: அரியலூா் மாவட்டத்தில் பிப். 20-ஆம் தேதி பொய்யாதநல்லூா், வெள்ளூா், ஓட்டக்கோவில், வாலாஜா நகரம், கருப்பிலாக்கட்டளை(கல்லக்குடி) ஆகிய ஊராட்சிகளிலும், பிப்.21-ஆம் தேதி ராயம்புரம், கீழக்காவட்டாங்குறிச்சி(குந்தபுரம்), திருமானூா், அன்னிமங்கலம், வெண்மான்கொண்டான் ஆகிய ஊராட்சிகளிலும், பிப்.25-ஆம் தேதி விளந்தை, வடவீக்கம், உட்கோட்டை, முத்துவோ்வமடம், பிள்ளைப்பாளையம் (கீழசெங்கல்மேடு) ஊராட்சிகளிலும், பிப்.26-ஆம் தேதி தா.பழூா், தழுதாழைமேடு, இளையபெருமாள்நல்லூா், குருவாலப்பா்கோவில், குண்டவெளி ஆகிய ஊராட்சிகளிலும் மக்கள் முதல்வா் திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளன.
முகாமில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, கால்நடை பராமரிப்பு உட்பட அனைத்துத்துறைகள் தொடா்புடைய கோரிக்கை மனுக்கள் பெறப்பட உள்ளது. பெறப்படும் அனைத்து மனுக்களும் சம்மந்தப்பட்ட துறையினரால் பரிசீலனை செய்யப்பட்டு 30 நாள்களுக்குள் தகுதியின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.
மேற்கண்ட பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நாள்களில் இச்சிறப்பு முகாமை நடத்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் தேவையான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அரசின் திட்டங்கள் பொதுமக்களிடம் சென்று சேருவதை உறுதி செய்ய வேண்டும் என்றாா் ஆட்சியா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா. மல்லிகா, ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன், கோட்டாட்சியா் ஸ்ரீஜா மற்றும் அனைத்துத் துறை மாவட்ட நிலை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.