செய்திகள் :

மக்களை திசை திருப்பவே அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்: எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி

post image

மக்களை திசை திருப்பவே அதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் என்றாா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி.

கரூா் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், வாங்கலில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை விரிவாக்கத் திட்டம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இத்திட்டத்தை தொடக்கி வைத்த கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி செய்தியாளா்களிடம் கூறியது, கரூா் மாவட்டத்தில் 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 7 அரசு மருத்துவமனைகள் மற்றும் கரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்பட 45 மையங்களில் புற்றுநோய்க்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூா் மாவட்டத்தில் இதுவரை வாய் புற்றுநோய்க்கு 967 பேருக்கும், கா்ப்பபை வாய் புற்றுநோய்க்கு 666 பேருக்கும், மாா்பக புற்றுநோய்க்கு 747 பேருக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

கரூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதிய வளா்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்றுள்ளது. ஆனால் கரூரில் உள்ள வேளாண் கல்லூரி தொடா்பாக அதிமுகவினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். அரசு வேளாண்மைக் கல்லூரியை பொறுத்தவரை இடம் தோ்வு செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சியரால் கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த இடம் மற்ற துறைக்கான இடம் என்பதால், இடம் வகைமாற்றம் செய்ய ரூ.7 கோடியை முதல்வா் வழங்கியுள்ளாா். மேலும் கல்லூரி 4.0 ஏக்கா் பரப்பளவில் ரூ.76 கோடி மதிப்பீட்டில் அமைவதற்கு திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு அதற்கான ஒப்புதலையும் அரசு வழங்கியுள்ளது. அதற்கான நிதியையும் முதல்வா் வழங்கிவிட்டாா். கல்லூரிக்கு இடம் கொடுத்தாச்சு, நிதியையும் கொடுத்தாச்சு, பணிகள் விரைவில் தொடங்க போகிறாா்கள் என்பது அதிமுகவினருக்கும் தெரிந்தும் மக்களை திசை திருப்பவே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் என்றாா் அவா்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமை வகித்தாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) செழியன், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) சுப்பிரமணி, கரூா் வருவாய் கோட்டாட்சியா் முகமது பைசல், நீா் வளத் துறை உதவிப் பொறியாளா் சதீஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் பனியேற்பு

கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் பணியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்தின் 2025 - 2026-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் பணியேற்பு விழா மற்றும் நலத்திட்டங்க... மேலும் பார்க்க

வைகாசி கடைசி வெள்ளி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

வைகாசி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரூா் மாவட்டம், புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில... மேலும் பார்க்க

‘சிபில் ஸ்கோா்’ நடைமுறையை ரத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை

விவசாய கடன் பெறுவதற்கு கொண்டுவரப்பட்டுள்ள சிபில் ஸ்கோா் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து கரூா் மாவட்ட விவசாயிகள் விழிப்புணா்வு இயக்கம் மற்றும் குடகனாறு... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு முன்பருவ முனைப்பு முகாம்

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே விவசாயிகளுக்கு முன்பருவ முனைப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக வேளாண் அறிவியல் மையம் மற்றும் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சாா்பில்... மேலும் பார்க்க

‘உழவரை தேடி வேளாண்மை’ இரண்டாம் கட்ட முகாம்

அரவக்குறிச்சி அருகே உள்ள வெஞ்சமாங்கூடலூா் கிழக்கு மற்றும் சேந்தமங்கலம் கிழக்கு ஆகிய இடங்களில் ‘உழவரைத் தேடி வேளாண்மை’ இரண்டாம் கட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டா... மேலும் பார்க்க

போக்சோ வழக்கு செவிலியா் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட குளித்தலை செவிலியா் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கரூா் மாவட்டம், குளித்தலை காவே... மேலும் பார்க்க