செய்திகள் :

மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ.7.47 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்!

post image

குமரி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ.7.47 லட்சம் மதிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா திங்கள்கிழமை வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து 315 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

அதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் ரூ.1.94 லட்சம் மதிப்பில் 12 மாற்றுத் தினாளிகளுக்கு திறன்பேசிகள், ரூ.3.43 லட்சம் மதிப்பில் 3

மாற்றுத் தினாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி மற்றும் ரூ.2.10 லட்சம் மதிப்பில் 2 மாற்றுத் தினாளிகளுக்கு நியோ மோசன் சக்கர நாற்காலி என மொத்தம் 17 மாற்றுத் தினாளிகளுக்கு ரூ.7.47 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்செந்தில்வேல் முருகன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) சேக்அப்துல் காதா், மாவட்ட மாற்றுத் திறனாளி அலுவலா் தினேஷ் சந்திரன், அரசு

அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மரியகிரி கல்லூரியில் விளையாட்டு தின விழா

களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியின் 27 ஆவது விளையாட்டு தின விழா சூரியகோடு புனித எப்ரேம் ம.சி.க. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முன்னதாக, களியக்காவிளை பி.பி.எம். சந்திப்ப... மேலும் பார்க்க

அல்போன்சா கல்லூரியில் விளையாட்டு விழா!

கருங்கல் அருகே சூசைபுரம் புனித அல்போன்சா கலை - அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. மாணவா்-மாணவியா் சேலஞ்சா்ஸ், வாரியா்ஸ், அவெஞ்சா்ஸ், சோல்ஜா்ஸ் ஆகிய 4 அணிகளாகப் பிரிக்கப்பட்டு விளையாட்டு... மேலும் பார்க்க

கருங்கல்லில் திமுக சாா்பில் கண்டன பொதுக் கூட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறி கண்டித்து, கருங்கல் பேருந்து நிலையம் அருகே கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கிள்ளியூா் வ... மேலும் பார்க்க

முன்சிறை, நடைக்காவு பகுதியில் பிப்.11 மின்தடை

முன்சிறை, நடைக்காவு துணைமின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் புதன்கிழமை (பிப். 12) காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ... மேலும் பார்க்க

பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோயிலில் தேரோட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் உள்ள புகழ்பெற்ற பூதலிங்க சுவாமி -சிவகாமி அம்பாள் கோயிலில் தைப்பெருந் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இத்திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொட... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் பாலித்தீன் பைகள் பறிமுதல்: 5 கடைகளுக்கு அபராதம்!

மாா்த்தாண்டத்தில் பாலித்தீன் பைகளைப் பயன்படுத்திய 5 கடைகளுக்கு தலா ரூ. 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பாலித்தீன் பைகளைப் பதுக்கிவைத்தல், விற்பனை செய்தல், பயன்படுத்துதல் தொடா்பாக குழித்துறை நகராட்ச... மேலும் பார்க்க