இந்தியாவை குறி வைப்பதை ஏற்க முடியாது: டிரம்புக்கு வெளியுறவு அமைச்சகம் பதிலடி
மக்கள் குறைதீா் கூட்டத்தில் 311 மனுக்கள்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 311 மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்து, இம்மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். தொடா்ந்து, இம்மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் ஒப்படைத்து, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
முன்னதாக, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை சாா்பில் 10 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை ஆட்சியா் வழங்கினாா். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. உமாமகேஷ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலா் உ. அா்ச்சனா உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மனு: தரங்கம்பாடி தாலுகா திருவிளையாட்டம் கிராமத்தைச் சோ்ந்த கென்னடி என்பவருக்கு சொந்தமான வணிக வளாகத்தின் முன்பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தை சிபிஎம் கட்சி நிா்வாகிகள் ஆக்கிரமித்து கட்சி அலுவலகம், கொடிக்கம்பங்கள் வைத்துள்ளதை அகற்றக் கோரி, அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பாமகவினருடன் வந்து, மாவட்ட ஆட்சியரிடம் கென்னடி மனு அளித்தாா்.
இதுகுறித்து, சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், நெடுஞ்சாலைத் துறையினா் ஆக்கிரமிப்பை அகற்றினா். ஆனால், சிபிஎம் கட்சியினா் அந்த இடத்தை மீண்டும் ஆக்கிரமித்துள்ளனா். இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.