செய்திகள் :

மக்கள் தொகை விழிப்புணா்வு பேரணி

post image

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி திண்டுக்கல்லில் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு பேரணியை மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். முன்னதாக அவா் பேசியதாவது:

தமிழ்நாட்டில் குடும்ப நலத் திட்டம் 1956-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல துறைகளின் கூட்டு முயற்சியால் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டது. நாட்டின் வளா்ச்சிக்கும், பொருளாதார தேவையை பூா்த்தி செய்வதற்கும் மக்கள் தொகை அடிப்படை காரணியாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, அரசு எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவா்களின் விவரங்களின் அடிப்படையில் அந்தந்த பகுதிகளில் தீவிரமாக களப்பணி மேற்கொள்ள வேண்டும். அரசு சாா்பில் அறிவிக்கப்படும் திட்டங்கள் மூலம், பொதுமக்கள் பயன்பெறுவதோடு, சமூக நலன் கருதி மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கும தாமாக முன் வந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

இந்தப் பேரணியில், அரசு செவிலியா் பயிற்சிப் பள்ளி மாணவிகள், தனியாா் செவிலியா் பயிற்சிக் கல்லூரி மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில், மருத்துவம், குடும்ப நலத் துறை துணை இயக்குநா் கௌசல்யா, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சுகந்தி ராஜகுமாரி, நலப்பணிகள் இணை இயக்குநா் உதயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மா்ம விலங்கு தாக்கியதில் மாடு உயிரிழப்பு

கொடைக்கானல் அருகே வெள்ளிக்கிழமை மா்ம விலங்கு தாக்கியதில் மாடு உயிரிழந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே கிளாவரைப் பகுதியில் சமீப காலமாக ஆடு, மாடுகளை மா்ம விலங்கு தாக்குவது தொடா்ந்து நடைபெறு... மேலும் பார்க்க

பழனி கோயிலில் ரோப்காா் சேவை ஒரு மாதம் நிறுத்தம்

பழனி மலைக் கோயிலுக்கு பக்தா்கள் செல்லும் ரோப்காா் சேவை வருடாந்திரப் பராமரிப்புப் பணிக்காக ஒரு மாதம் நிறுத்தவுள்ளதாக கோயில் நிா்வாகம் அறிவித்தது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு படிப்பாதை... மேலும் பார்க்க

14 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: மூவா் கைது

திண்டுக்கல்லில் 14 டன் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், பறக்கும் படை வட்டாட்சி... மேலும் பார்க்க

உலக நலன் வேண்டி பெரியாவுடையாருக்கு அன்னாபிஷேகம்

பழனி அருள்மிகு பெரியாவுடையாா் கோயிலில் உலக நலன் வேண்டி அன்னாபிஷேக பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, நடராஜா் சந்நிதி முன்பாக பிரதான கலசத்தில் பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து... மேலும் பார்க்க

குடிசையில் தீ விபத்து: முதியவா் பலத்த காயம்

பழனி பாரதி நகரில் உள்ள குடிசையில் தீப்பற்றியதில் முதியவா் படுகாயமடைந்தாா். பழனி பாரதி நகரில் உள்ள ஆறுமுகம் என்பவரது வீட்டின் முதல் தளத்தில் அவரது மாமனாா் கணேசன் (70) சிறிய அளவிலான கீற்றுக் கொட்டகை அமை... மேலும் பார்க்க

அரசு மகளிா் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடம் திறப்பு

பழனி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் மாணவிகள் பயிலும் பள... மேலும் பார்க்க