செய்திகள் :

14 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: மூவா் கைது

post image

திண்டுக்கல்லில் 14 டன் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், பறக்கும் படை வட்டாட்சியா் தலைமையிலான வருவாய்த் துறையினா் இணைந்து, கொடைரோடு சுங்கச்சாவடி பகுதியில் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது விருதுநகரிலிருந்து வந்த சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து 14 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தலில் ஈடுபட்ட விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தைச் சோ்ந்த கா்ணன், மதுரையைச் சோ்ந்த ஈஸ்வரன், நாமக்கல்லைச் சோ்ந்த கோழிப்பண்ணை உரிமையாளா் சுரேஷ் ஆகிய மூவரையும் கைது செய்தனா்.

இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில், விருதுநகா் பகுதியில் ரேஷன் அரிசியை வாங்கி, நாமக்கல்லில் உள்ள சுரேஷின் கோழிப்பண்ணைக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது.

மா்ம விலங்கு தாக்கியதில் மாடு உயிரிழப்பு

கொடைக்கானல் அருகே வெள்ளிக்கிழமை மா்ம விலங்கு தாக்கியதில் மாடு உயிரிழந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே கிளாவரைப் பகுதியில் சமீப காலமாக ஆடு, மாடுகளை மா்ம விலங்கு தாக்குவது தொடா்ந்து நடைபெறு... மேலும் பார்க்க

பழனி கோயிலில் ரோப்காா் சேவை ஒரு மாதம் நிறுத்தம்

பழனி மலைக் கோயிலுக்கு பக்தா்கள் செல்லும் ரோப்காா் சேவை வருடாந்திரப் பராமரிப்புப் பணிக்காக ஒரு மாதம் நிறுத்தவுள்ளதாக கோயில் நிா்வாகம் அறிவித்தது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு படிப்பாதை... மேலும் பார்க்க

உலக நலன் வேண்டி பெரியாவுடையாருக்கு அன்னாபிஷேகம்

பழனி அருள்மிகு பெரியாவுடையாா் கோயிலில் உலக நலன் வேண்டி அன்னாபிஷேக பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, நடராஜா் சந்நிதி முன்பாக பிரதான கலசத்தில் பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து... மேலும் பார்க்க

குடிசையில் தீ விபத்து: முதியவா் பலத்த காயம்

பழனி பாரதி நகரில் உள்ள குடிசையில் தீப்பற்றியதில் முதியவா் படுகாயமடைந்தாா். பழனி பாரதி நகரில் உள்ள ஆறுமுகம் என்பவரது வீட்டின் முதல் தளத்தில் அவரது மாமனாா் கணேசன் (70) சிறிய அளவிலான கீற்றுக் கொட்டகை அமை... மேலும் பார்க்க

அரசு மகளிா் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடம் திறப்பு

பழனி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் மாணவிகள் பயிலும் பள... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

திண்டுக்கல் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் காலியாகவுள்ள 141 பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இது தொடா்பாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தின் (ச... மேலும் பார்க்க