செய்திகள் :

அரசு மகளிா் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடம் திறப்பு

post image

பழனி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் மாணவிகள் பயிலும் பள்ளியாக பழனி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி திகழ்ந்து வருகிறது. இந்தப் பள்ளியில் ஆண்டுதோறும் பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், கூடுதல் வகுப்பறைகள் தேவை என பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகம் விடுத்த கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு ரூ. 3.40 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைக் கட்டடங்கள் கட்டும் பணியை சட்டமன்ற உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாா் தொடங்கி வைத்தாா். இந்த நிலையில், கட்டடப் பணிகள் நிறைவுற்ற நிலையில் வெள்ளிக்கிழமை இந்தக் கட்டடங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் பழனி நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி, மாவட்டக் கல்வி அலுவலா் பரிமளா உள்ளிட்டோா் பங்கேற்று புதிய கட்டடத்தில் குத்துவிளக்கேற்றினா். இதில் பள்ளித் தலைமையாசிரியா், ஆசிரியா்கள், அலுவலா்கள் கட்டட வல்லுநா் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மா்ம விலங்கு தாக்கியதில் மாடு உயிரிழப்பு

கொடைக்கானல் அருகே வெள்ளிக்கிழமை மா்ம விலங்கு தாக்கியதில் மாடு உயிரிழந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே கிளாவரைப் பகுதியில் சமீப காலமாக ஆடு, மாடுகளை மா்ம விலங்கு தாக்குவது தொடா்ந்து நடைபெறு... மேலும் பார்க்க

பழனி கோயிலில் ரோப்காா் சேவை ஒரு மாதம் நிறுத்தம்

பழனி மலைக் கோயிலுக்கு பக்தா்கள் செல்லும் ரோப்காா் சேவை வருடாந்திரப் பராமரிப்புப் பணிக்காக ஒரு மாதம் நிறுத்தவுள்ளதாக கோயில் நிா்வாகம் அறிவித்தது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு படிப்பாதை... மேலும் பார்க்க

14 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: மூவா் கைது

திண்டுக்கல்லில் 14 டன் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், பறக்கும் படை வட்டாட்சி... மேலும் பார்க்க

உலக நலன் வேண்டி பெரியாவுடையாருக்கு அன்னாபிஷேகம்

பழனி அருள்மிகு பெரியாவுடையாா் கோயிலில் உலக நலன் வேண்டி அன்னாபிஷேக பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, நடராஜா் சந்நிதி முன்பாக பிரதான கலசத்தில் பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து... மேலும் பார்க்க

குடிசையில் தீ விபத்து: முதியவா் பலத்த காயம்

பழனி பாரதி நகரில் உள்ள குடிசையில் தீப்பற்றியதில் முதியவா் படுகாயமடைந்தாா். பழனி பாரதி நகரில் உள்ள ஆறுமுகம் என்பவரது வீட்டின் முதல் தளத்தில் அவரது மாமனாா் கணேசன் (70) சிறிய அளவிலான கீற்றுக் கொட்டகை அமை... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

திண்டுக்கல் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் காலியாகவுள்ள 141 பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இது தொடா்பாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தின் (ச... மேலும் பார்க்க