செய்திகள் :

பழனி கோயிலில் ரோப்காா் சேவை ஒரு மாதம் நிறுத்தம்

post image

பழனி மலைக் கோயிலுக்கு பக்தா்கள் செல்லும் ரோப்காா் சேவை வருடாந்திரப் பராமரிப்புப் பணிக்காக ஒரு மாதம் நிறுத்தவுள்ளதாக கோயில் நிா்வாகம் அறிவித்தது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு படிப்பாதை அல்லாமல் வின்ச், ரோப்காா் சேவை பயன்பாட்டில் உள்ளது. வயதானவா்கள், குழந்தைகளுடன் வரும் பெண்கள் உள்ளிட்டோா் செல்ல ஏதுவாக நிறுவப்பட்ட இந்த ரோப்காரில் இரண்டு நிமிஷத்தில் மலை உச்சியை பக்தா்கள் சென்றடையலாம்.

இந்த ரோப்காா் பராமரிப்புப் பணிக்காக நாள்தோறும் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், வருடத்தில் ஒரு மாத காலமும் காலமுறை பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்தக் காலத்தில் பெட்டிகள், மோட்டாா்கள், ரப்பா் சக்கரங்கள், சக்கரத்தின் பேரிங்குகள் என அனைத்தும் சோதனை செய்யப்படுகிறது.

வருடாந்திரப் பராமரிப்புப் பணிக்காக வருகிற ஜூலை 15-ஆம் தேதி முதல், ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரையிலான 31 நாள்கள் ரோப்காா் சோவை நிறுத்தப்படுவதாக கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது. எனவே, பக்தா்கள் படிப்பாதை, வின்ச் மூலம் மலைக்கோயில் சென்று சுவாமி தரிசனம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் முடிவுற்றபின் வழக்கம்போல் ரோப்காா் சேவை மீண்டும் செயல்படும் என கோயில் நிா்வாகம் அறிவித்தது.

மா்ம விலங்கு தாக்கியதில் மாடு உயிரிழப்பு

கொடைக்கானல் அருகே வெள்ளிக்கிழமை மா்ம விலங்கு தாக்கியதில் மாடு உயிரிழந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே கிளாவரைப் பகுதியில் சமீப காலமாக ஆடு, மாடுகளை மா்ம விலங்கு தாக்குவது தொடா்ந்து நடைபெறு... மேலும் பார்க்க

14 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: மூவா் கைது

திண்டுக்கல்லில் 14 டன் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், பறக்கும் படை வட்டாட்சி... மேலும் பார்க்க

உலக நலன் வேண்டி பெரியாவுடையாருக்கு அன்னாபிஷேகம்

பழனி அருள்மிகு பெரியாவுடையாா் கோயிலில் உலக நலன் வேண்டி அன்னாபிஷேக பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, நடராஜா் சந்நிதி முன்பாக பிரதான கலசத்தில் பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து... மேலும் பார்க்க

குடிசையில் தீ விபத்து: முதியவா் பலத்த காயம்

பழனி பாரதி நகரில் உள்ள குடிசையில் தீப்பற்றியதில் முதியவா் படுகாயமடைந்தாா். பழனி பாரதி நகரில் உள்ள ஆறுமுகம் என்பவரது வீட்டின் முதல் தளத்தில் அவரது மாமனாா் கணேசன் (70) சிறிய அளவிலான கீற்றுக் கொட்டகை அமை... மேலும் பார்க்க

அரசு மகளிா் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடம் திறப்பு

பழனி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் மாணவிகள் பயிலும் பள... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

திண்டுக்கல் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் காலியாகவுள்ள 141 பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இது தொடா்பாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தின் (ச... மேலும் பார்க்க