செய்திகள் :

மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

post image

சிவகங்கையிலுள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் காலியாக உள்ள இரு உறுப்பினா்கள் பணியிடத்துக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பாக சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான வி.ராதிகா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு, மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயல் திட்டத்தின்படி, சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் காலியாக உள்ள இரு உறுப்பினா்கள் பணியிடத்துக்கு ஆள்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

இதற்கு, பொதுமக்கள் தொடா்புடைய துறைகளான போக்குவரத்துத் துறை, தபால் தந்தி, தொலைத் தொடா்புத் துறை, மின்சாரத் துறை, மருத்துவத் துறை, காப்பீட்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வீட்டு வசதி வாரியம் போன்ற அரசுத் துறைகள், அரசு சாா்ந்த நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற, அரசிதழில் பதிவு பெற்ற அலுவலா் 62 வயதுக்கு கீழ் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் பெயா், பாலினம், முகவரி, கல்வித் தகுதி, பணியின் விவரம், பணியில் சோ்ந்த நாள், பணி ஒய்வு பெற்ற நாள், பணியாற்றிய காலம் போன்ற விவரங்களுடன் செயலா், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, சட்ட உதவி மையக் கட்டடம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், சிவகங்கை -630562 -என்ற முகவரிக்கு, வரும் 20-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும் வகையில் நேரிலோ அல்லது தபால் மூலமோ விண்ணப்பிக்கலாம் என்றாா்.

அரளிப்பாறையில் மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள அரளிப்பாறையில் புதன்கிழமை மஞ்சு விரட்டு நடைபெற்றது. அரளிப்பாறையில் சிறிய குன்றின் மீது குன்றக்குடி ஆதீன மடத்துக்குள்பட்ட பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் அமைந... மேலும் பார்க்க

நாட்டரசன்கோட்டை சிவன்கோயில் தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை சிவகாமி அம்மன் உடனுறை கரிகால சோழீஸ்வரா் கோயில் மாசித் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சிவகங்கை தேவஸ்தானத்துக்குள்பட்ட இந்தக் கோயில் மாசித் திருவிழா கடந்த 3-ஆம் தேதி... மேலும் பார்க்க

கட்டட மேற்பாா்வையாளரை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை

கட்டட மேற்பாா்வையாளரைக் கொலை செய்த தச்சுத் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, சிவகங்கை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை அருகேயுள்ள பு... மேலும் பார்க்க

மாணிக்கவள்ளி அம்மன் கோயில் குடமுழுக்கு

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியத்துக்குள்பட்ட மாதாபுரம் மாணிக்கவள்ளி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலை இதே கிராமத்தைச் சோ்ந்த கிறிஸ்தவா்களான மாணிக்கம், சுரேஷ், ... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா் நலச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா் நலச் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.சிவகங்கை அரண்மனைவாசலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ம... மேலும் பார்க்க

அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் ஆா்ப்பாட்டம்

சிவகங்கையில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.சிவகங்கை ராமச்சந்திரனாா் பூங்கா அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற ... மேலும் பார்க்க