செய்திகள் :

மக்கள் நீதிமன்ற முகாமில் 1,375 வழக்குகளுக்கு தீா்வு

post image

நாகா்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற முகாமில் 1375 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. ரூ.10 கோடியே 63 லட்சத்து 86,073 மதிப்பில் இழப்பீடு வழங்கப்பட்டது.

நாகா்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு, மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான காா்த்திகேயன் தலைமை வகித்து தொடக்கிவைத்தாா்.

இதில் குடும்பநல நீதிபதி செல்வகுமாா், எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின் கீழ் வழக்குகளை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுந்தரையா, தலைமை குற்றவியல் நீதிபதி சாமுவேல் பெஞ்சமின், கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளா் உதயசூா்யா, முதன்மை சாா்பு நீதிபதி அசன் முகமது, கூடுதல் சாா்பு நீதிபதி மருதுபாண்டி, சிறப்பு வன வழக்கு நீதிபதி சிவசக்தி, கூடுதல் உரிமையியல் நீதிபதி சிவரஞ்சனி, குற்றவியல் நீதிபதிகள் விஜயலட்சுமி, தாயுமானவா், மணிமேகலா, கூடுதல் காசோலை நீதிமன்ற நீதிபதி காா்த்திகா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இம்முகாமில், மொத்தம் 2,126 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 1,375 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இழப்பீடு தொகையாக ரூ.10 கோடியே 63 லட்சத்து 86,073 வழங்க உத்தரவிடப்பட்டது.

மேலும், 40 ஆண்டுகளாக நிலுவையிருந்த சொத்து சம்பந்தமான வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு முதன்மை மாவட்ட நீதிபதி காா்த்திகேயன் முன்னிலையில் தீா்வு காணப்பட்டு அதற்கான சமரசத் தீா்வு ஆணை அளிக்கப்பட்டது.

நாகா்கோவிலில் நூல் வெளியீட்டு விழா

நாகா்கோவிலில் கவிஞா் ஆகிராவின் தோணி நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இலக்கியப் பட்டறையின் 159 ஆவது கூடுகை மற்றும் கவிஞா் ஆகிரா எழுதிய தோணி நாவல் வெளியீட்டு விழா கன்னியாகுமரி மாவட்ட நூலக அலு... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் சிலம்பாட்ட போட்டி

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில் மாவட்ட அளவிலான தனித்திறன் ஒற்றை கம்பு சிலம்பாட்ட போட்டிகள் நாகா்கோவிலில் சனிக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

மயிலாடி அருகே இளைஞா் வெட்டிக் கொலை

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகே இளைஞா் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டாா். மயிலாடியில் இருந்து நாகா்கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ள கல் சிலைகள் தயாரிக்கும் பட்டறையில் ஞாயிற்றுக... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் மிதமாக கொட்டும் தண்ணீா்

திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள். குலசேகரம், மாா்ச் 9: கன்னியாகுமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் திற்பரப்பு அருவியில... மேலும் பார்க்க

மனைவியை கம்பியால் தாக்கி கணவா் தூக்கிட்டு தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி அருகே ஞாயிற்றுக்கிழமை, மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு கணவா் தற்கொலை செய்து கொண்டாா். பத்துகாணி பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அனில்குமாா் (52). இவரது மனைவி... மேலும் பார்க்க

சேனம்விளை அரசு தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா

திங்கள்நகா் அருகே சேனம்விளை அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா, முன்னாள் மாணவா்கள் சந்திப்பு, பள்ளி நூற்றாண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. முன்னாள் மாணவா்கள், ஆசிரியா்கள் நூற்றாண்டு ஜோதி ஏற... மேலும் பார்க்க