செய்திகள் :

மங்கோலியாவில் வேகமாகப் பரவும் தட்டம்மை! 3000-ஐ தாண்டிய பாதிப்புகள்!

post image

கிழக்கு ஆசிய நாடான மங்கோலியாவில் 3000-க்கும் அதிகமான தட்டம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

மங்கோலியா நாட்டில் தட்டம்மை தொற்றுப் பரவல் வேகமெடுத்து வரும் சூழலில் அந்நாட்டில் இதுவரை 3,042 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 114 புதிய பாதிப்புகள் உறுதியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தப் பாதிப்புகளிலிருந்து 95 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில், இந்தத் தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 1,904 ஆக உயர்ந்துள்ளது.

மங்கோலியாவின் மருத்துவர்கள் கூறுகையில், புதியதாக கண்டறியப்பட்டுள்ள பாதிப்புகளில், 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் வெறும் ஒரு தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்ட பள்ளிக்குழந்தைகள் எனக் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.

எனவே, அந்நாட்டுப் பெற்றோர்கள் உடனடியாகத் தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை முழுமையாகச் செலுத்தி அவர்களை தொற்றுப் பரவலிலிருந்து பாதுகாக்குமாறு, அந்நாட்டு சுகாதார நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.

முன்னதாக, தட்டம்மை பாதிப்பானது, சுவாச துளிகள் மற்றும் நோயாளிகளுடனான நேரடி தொடர்பின் மூலமாக எளிதில் பரவக் கூடும் எனவும் இந்தப் பாதிப்பு ஏற்பட்டால், காய்ச்சல், சளி, வறட்டு இருமல், வீங்கிய கண்கள் போன்ற அறிகுறிகள் உண்டாகும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்தத் தொற்றானது, குழந்தைகளைதான் அதிகம் பாதிக்கும் எனக் கூறப்படும் நிலையில், கடந்த 2023-ம் ஆண்டில் மட்டும் சர்வதேச அளவில் 1,07,500 பேர் தட்டம்மை பாதிப்பினால் பலியாகியுள்ளனர். அதில், பெரும்பாலானோர் குழந்தைகள் எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஐ.நா. கூட்டத்தில் பாகிஸ்தானை பேசச் சொல்வதே அவமானம்: கொந்தளித்த இந்தியா

எக்ஸ் தளம் திடீரென முடங்கியது!

சமூக ஊடகமான எக்ஸ் தளம் திடீரென முடங்கியதாக பயனர்கள் அவதி தெரிவித்து வருகின்றனர். எக்ஸ் வலைதளம், செயலி இரண்டும் முடங்கியதாக புலம்பி வருகின்றனர். சுமார் ஒரு மணிநேரமாக எக்ஸ் தளத்தில் தேடல், உள்ளடக்கம் இர... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் - சீனா! டிராகனின் இரட்டை விளையாட்டு!

இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பாகிஸ்தானுக்கு சீனா, துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. இருப்பினும், பாகிஸ்தானுக்கு சீனா முழு ஆதரவையும் வழங்கத் தயங்குகிறது. கா... மேலும் பார்க்க

ரஷியா - உக்ரைன் இடையே 390 போர்க் கைதிகள் பரிமாற்றம்!

ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் முதல்முறையாக போர்க் கைதிகளின் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. ரஷியா - உக்ரைன் போர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் சூழலில், துருக்கியில் கடந... மேலும் பார்க்க

ஜெர்மனியில் பெண் நடத்திய கத்திக்குத்து சம்பவத்தில் 18 பேர் படுகாயம்!

ஜெர்மனியின் ஹம்பர்க் பகுதியில், ஒரு பெண் நடத்திய கத்திக் குத்துச் சம்பவத்தில் 18 பேர் காயமடைந்தனர். அவர்களில் 4 பேரின் நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவத்த... மேலும் பார்க்க

விதிகளை பூா்த்தி செய்ததால் பாகிஸ்தானுக்கு ரூ.8,527 கோடி கடன்: ஐஎம்எஃப்

விதிகள் மற்றும் இலக்குகளை பாகிஸ்தான் பூா்த்தி செய்ததால் பாகிஸ்தானுக்கு ரூ.8,527 கோடி (1 பில்லியன் டாலா்) கடன் வழங்கப்பட்டதாக சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்தது. பாகிஸ்தானுக்கு விரிவுபடுத்தப்பட்ட ந... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பள்ளிப்பேருந்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பள்ளிப்பேருந்தின் மீதான வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. பலூசிஸ்தான் குஸ்தார் மாவட்டத்தில், கடந்த மே 21 ஆம் தேதியன்று ராணுவப் பள... மேலும் பார்க்க