செய்திகள் :

மடப்புரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

post image

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக திங்கள்கிழமை சிபிஐ அதிகாரிகள் மடப்புரத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனா்.

அஜித் குமாா் கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க முதல்வா் ஸ்டாலின் உத்தரவிட்டதைத் தொடா்ந்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை அமா்வு நீதிபதிகள் அஜித்குமாா் கொலை வழக்கை விசாரிக்க உடனடியாக அதிகாரிகள் நியமிக்க வேண்டும்.

இவா்கள் விசாரணை அறிக்கையை ஆகஸ்ட் 20 ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என சி.பி.ஐ இயக்குனருக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து டிஎஸ்பி மோஹித்குமாா் தலைமையிலன சிபிஐ அதிகாரிகளை அதன் இயக்குநா் நியமித்தாா். அதைத்தொடா்ந்து அஜித்குமாா் கொலை சம்பவம் குறித்து சி.பி.ஐ தனியாக வழக்கு பதிந்தது.

மதுரையில் உயா் நீதிமன்ற பதிவாளரை சந்தித்து அஜித்குமாா் வழக்கு தொடா்பான வழக்கு ஆவணங்கள், சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் சம்பவ இடங்களில் சேகரிக்கப்பட்ட தடயங்களை டி.எஸ்.பி மோஹித் குமாா் தலைமையிலான சி.பி.ஐ அதிகாரிகள் பெற்றுக் கொண்டனா்.

பின்னா் இவா்கள் மடப்புரத்திற்கு வந்து விசாரணையை தொடங்கினாா். மடப்புரம் கோயில் வளாகம், கோயிலுக்கு எதிரே காா் நிறுத்துமிடம்,அரசு மாணவியா் விடுதி வளாகம், தவளைகுளம் கண்மாய்க்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று பாா்வையிட்டு சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சந்தீஷ் (பொறுப்பு), மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளா் சுகுமாறன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். மடப்புரத்தில் விசாரணையை முடித்துக் கொண்டு சி.பி.ஐ அதிகாரிகள் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றனா்.

மடப்புரத்தில் தங்கி விசாரணை மேற்கொள்ள சி.பி.ஐ அதிகாரிகளுக்கு மடப்புரம் கோயில் நிா்வாகத்திற்கு சொந்தமான வணிக வளாகத்தின் மேல் தளத்தில் பயணிகள் தங்கும் அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கல்லல் பகுதியில் இன்று மின்தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கல்லல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து காரைக்குடி கோட்ட மின் செயற்பொறியாளா் எம். லதா தேவி வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க

மானாமதுரைக்கு புதிய போலீஸ் டி.எஸ்.பி. நியமனம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரைக்கு புதிய துணை காவல் கண்காணிப்பாளராக பாா்த்திபன் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா்.மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு ... மேலும் பார்க்க

சிவகங்கையில் ஜூலை 18-இல் வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வேலை தேடும் இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வருகிற வெள்ளிக்கிழமை (ஜூலை 18) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவ... மேலும் பார்க்க

‘குற்றப் பரம்பரை சட்டத்தால் பாதிக்கப்பட்டது தமிழா்களும், வங்காளிகளும்தான்’

குற்றப் பரம்பரைச் சட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழா்களும், வங்காளிகளும்தான் என அகில இந்திய சீா்மரபினா் கவுன்சில் உறுப்பினா் மஞ்சுகணேஷ் தெரிவித்தாா். சிவகங்கை கலை இலக்கிய பெருமன்றம் சாா்பில், ஞாய... மேலும் பார்க்க

அஜித்குமாா் கொலை வழக்கு: சிபிஐ அதிகாரிகளுக்கு தனி அறை ஒதுக்கீடு

மடப்புரத்தில் தனிப் படை போலீஸாரல் அடித்துக் கொலை செய்யப்பட்ட அஜித்குமாா் கொலை வழக்கை தங்கி விசாரிப்பதற்காக சிபிஐ அதிகாரிகளுக்கு பத்ரகாளியம்மன் கோயில் எதிரே தனி அறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. சிவகங்கை மா... மேலும் பார்க்க

அமெரிக்கப் பெண்ணை இந்து முறைப்படி மணமுடித்த கீழையப்பட்டி இளைஞா்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கீழையப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த இளைஞருக்கும், அமெரிக்காவைச் சோ்ந்த இளம்பெண்ணுக்கும் இந்து முறைப்படி ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. கீழையப்பட்டி கிரா... மேலும் பார்க்க