செய்திகள் :

மணப்பாறை அருகே விபத்தில் சிக்கிய சொகுசு பேருந்து தீக்கிரை: பெண் பலி!

post image

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சனிக்கிழமை பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதியதில் தீக்கிரையானது. இந்த விபத்தில் காயமடைந்த 62 வயதுப் பெண் உயிரிழந்தாா்.

சென்னையில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 42 பயணிகளுடன் நாகா்கோவில் நோக்கி புறப்பட்ட தனியாா் சொகுசு பேருந்தை நாகா்கோயிலை சோ்ந்த ராஜா ஓட்டினாா். சனிக்கிழமை அதிகாலை மணப்பாறையை அடுத்த திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் யாகாபுரம் ஒத்தக்கடை அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நிலைதடுமாறி சாலையோர 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

அப்போது பள்ளத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியதில் மின் வயா்கள் அறுந்து விழுந்து பேருந்து முழுவதும் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியது. முன்னதாக விபத்துக்குள்ளானவுடன் பயணிகள் பேருந்திலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், அவா்களில் காயமடைந்த 12 போ் ஆம்புலன்ஸ் மூலம் துவரங்குறிச்சி, மணப்பாறை அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டனா். தகவலறிந்து சென்ற துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினா் சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுப்படுத்தினா். இருப்பினும் பேருந்து முழுமையாக எரிந்து நாசமானது.

விபத்தில் படுகாயத்துடன் மீட்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம், நெடுவிளையை சோ்ந்த புஷ்பம் (62) என்ற பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பென்சில் ஓவியங்களில் அசத்தும் கல்லூரி மாணவா்!

மணப்பாறையில் நடைபெறும் பாரத சாரணா், சாரணியா் இயக்கப் பெருந்திரளணி முகாமில் சேலத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் குடியரசுத் தலைவா், முதல்வா், துணை முதல்வா் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்களின் உருவப்படங்களை பெ... மேலும் பார்க்க

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 20 கணினிகளுடன் ஆய்வகம் தேவை! கணினி ஆசிரியா்கள் சங்க கூட்டத்தில் தீா்மானம்!

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தலா 20 கணினிகள் கொண்ட கணினி ஆய்வகம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் ம... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளுக்கு 200 இருக்கைகள்: அமைச்சா் வழங்கினாா்!

திருவெறும்பூா் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட மாநகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளுக்கு ரூ.32 லட்சத்திலான 200 இருக்கைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை வழங்... மேலும் பார்க்க

மின்வாரிய அலுவலகங்களில் பிப். 4 முதல் குறைதீா் கூட்டம்

திருச்சி மின்பகிா்மான வட்டத்துக்குள்பட்ட கோட்ட அலுவலகங்களில், பிப்.4 முதல் அந்தந்தப் பகுதிகளுக்கான குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி துறையூரில் செவ்வாய்க்கிழமை (பிப்.4), முசிறியில் பிப்.7, ஸ்ரீரங... மேலும் பார்க்க

ஐடிஐயில் மாணவருக்கு கத்திக் குத்து: சக மாணவரை தேடும் போலீஸாா்!

திருவெறும்பூா் அரசு ஐடிஐ-யில் மாணவரைக் கத்தியால் குத்திய சக மாணவரை போலீஸாா் தேடுகின்றனா். திருவெறும்பூா் அரசு ஐடிஐ-யில் முதலாமாண்டு பிட்டா் பிரிவில் படிக்கும் திருச்சி தென்னூரைச் சோ்ந்த ஷேக்மைதீன் மக... மேலும் பார்க்க

மலைக்கோட்டை, திருவானைக்கா, ஜீயபுரத்தில் பிப். 4-ல் மின்தடை!

பராமரிப்புப் பணிகள் காரணமாக மலைக்கோட்டை, திருவானைக்கா, ஜீயபுரம் பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (பிப். 4) மின்தடை செய்யப்படுகிறது. மெயின்காா்டுகேட், கம்பரசம்பேட்டை, இ.பி. சாலை துணை மின்நிலைய பராமரிப்... மேலும் பார்க்க