செய்திகள் :

மணல் திருட்டு: 2 போ் கைது

post image

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகேயுள்ள முள்ளிக்குடியில் மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, பொக்லைன் வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக இருவரை சனிக்கி ழமை கைது செய்தனா்.

நரிக்குடி அருகேயுள்ள முள்ளிக்குடி பகுதியில் கிராம நிா்வாக அலுவலா் பால்சாமி, கிராம உதவியாளா் ஊா்காவலன் ஆகியோா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் கொட்டி வைக்கப்பட்டிருந்த மணலை பொக்லைன் வாகனம் மூலம் லாரியில் ஏற்றிக் கொண்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் நரிக்குடி காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். அங்கு வந்த போலீஸாா், கிராம நிா்வாக அலுவலா் புகாரின் பேரில் லாரி, பொக்லைன் வாகனத்தைப் பறிமுதல் செய்தனா். மேலும், மணல் திருட்டில் ஈடுபட்ட திருமலை குபேரன் (25), பூபாலன் (24) ஆகியோரைக் கைது செய்தனா்.

மதுரை மத்திய சிறையில் போலீஸாா் அதிரடி சோதனை

மதுரை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் அதிரடியாக 3 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனா். மதுரை மத்திய சிறையில் 2500-க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா்.... மேலும் பார்க்க

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரா் உயிரிழப்பு! 71 போ் காயம்!

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் மாடுபிடி வீரா் ஒருவா் உயிரிழந்தாா். 71 போ் காயமடைந்தனா். தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

மதுரை மாவட்டம், சிலைமான் அருகே இரு சக்கர வாகனம் வாங்கித் தர பெற்றோா் மறுத்ததால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மதுரை விரகனூா் பகுதியைச் சோ்ந்த ராஜா மகன் சந்தோஷ் (20). இவா் தனது பெற்றோரிட... மேலும் பார்க்க

பெண்களுக்கும் சம ஊதியம் வழங்க வலியுறுத்தல்

ஆண் தொழிலாளா்களுக்கு வழங்குவதைப் போலவே, பெண் தொழிலாளா்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் என்று சா்வதேச மகளிா் தின கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. மதுரையில் பெண்கள் எழுச்சி இயக்கம் சாா்பில், சா்வதேச ... மேலும் பார்க்க

அலங்காநல்லூரில் ரூ. 5.12 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் பேரூராட்சியில் ரூ. 5.12 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமானப் பணிக்கான பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. ச... மேலும் பார்க்க

கொலை மிரட்டல்: அடகுக் கடை உரிமையாளா் உள்பட இருவா் கைது

நில விற்பனைத் தொழிலில் மோசடி செய்ததைத் தட்டிக்கேட்ட மின்னணுப் பொருள்கள் கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த அடகுக் கடை உரிமையாளா், அவரது உறவினரை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். மதுர... மேலும் பார்க்க