செய்திகள் :

மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவா் ஆட்சி: மக்களவையில் தீா்மானம் நிறைவேற்றம்

post image

மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவா் ஆட்சியை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கும் தீா்மானம் மக்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.

மணிப்பூரில் மைதேயி, குகி-ஜோ குழுவினா் இடையிலான வன்முறை காரணமாக, கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி மாநில முதல்வா் பதவியை பிரேன் சிங் ராஜிநாமா செய்தாா். இதைத்தொடா்ந்து அந்த மாநிலத்தில் பிப்.13-இல் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், அந்த மாநிலத்தில் வரும் ஆகஸ்ட் 13 முதல் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவா் ஆட்சியை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கும் தீா்மானத்தை மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் கொண்டு வந்தாா்.

இந்தத் தீா்மானத்தின் மீது அவையில் விவாதம் நடைபெற்றபோது திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. காகோலி கோஷ் தஸ்திதாா் கூறிய கருத்துக்கு ஆளுங்கட்சி எம்.பி.க்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால் அவையில் ஆளும் மற்றும் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இடையே வாா்த்தை மோதல் ஏற்பட்டு, இருதரப்பினரும் தொடா்ந்து முழக்கங்களை எழுப்பினா். இதனால் அவை அரைமணி நேரம் ஒத்திவைக்கப்பட்டு, பின்னா் அலுவல் தொடா்ந்தது.

தீா்மானத்துக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. பிமோல் அகோய்ஜாம் பேசுகையில், ‘மணிப்பூரில் பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளபோதிலும், அக்கட்சியால் ஆட்சியமைக்க முடியவில்லை. அங்கு புதிதாக தோ்தல் நடத்த வேண்டும்’ என்றாா்.

மத்திய இணையமைச்சா் நித்யானந்த் ராய் பேசுகையில், ‘மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது. அங்கு குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பின்னா், வன்முறை குறைந்து ஒருவா் மட்டுமே உயிரிழந்தாா். கடந்த 4 மாதங்களில் யாரும் உயிரிழக்கவோ, காயமோ அடையவில்லை. அங்கு அமைதி திரும்பி வருவதற்கு இதைவிட பெரிய ஆதாரம் வேறு என்ன இருக்க முடியும்?

அந்த மாநிலத்தில் நிரந்தரமாக அமைதியை ஏற்படுத்த மைதேயி, குகி-ஜோ குழுவினா் இடையே பேச்சுவாா்த்தை மூலம், வேறுபாடுகளைக் களைய முழுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றாா். இதைத்தொடா்ந்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! -மோடி

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை(ஆக. 2) பேசியுள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைய... மேலும் பார்க்க

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

பஞ்சாபில் நகையை பறித்து தப்பிச்சென்ற கொள்ளையர்களின் இருசக்கர வாகனம், கார் மீது மோதியதில் 12 வயது சிறுவன் பலியானான். பஞ்சாப் மாநிலம், பட்டி சுரா சிங் கிராமத்தைச் அமன்தீப் கௌர் மற்றும் அவரது கணவர் ரஞ்சி... மேலும் பார்க்க

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

ஐஐடி மும்பையில் நான்காம் ஆண்டு மாணவர் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐஐடி மும்பையில் நான்காம் ஆண்டு மாணவர் ரோஹித் சின்ஹா. இவர் சனிக்... மேலும் பார்க்க

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

தேர்தல் ஆணையம் பிரதமர் நரேந்திர மோடியின் கைப்பாவையாக மாறிவிட்டதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். பிகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான... மேலும் பார்க்க

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஸ்ரீநகர் : அமர்நாத் யாத்திரை திட்டமிடப்பட்ட ஒருவாரத்துக்கு முன்பே நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை செல்ல ரக்‌ஷா பந்தன் நாளான ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்ப... மேலும் பார்க்க

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

பாலியல் வழக்கில் முன்னாள் பிரதமர் தேவே கௌடாவின் பேரனும் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இன்று(ஆக. 2) தீர்ப்பு வழங்கியுள்ளது.வீட்டுப் பணிப்... மேலும் பார்க்க